ஜேஎன்யூவில் என்ன நடந்தது? டெல்லி கமிஷ்னரிடம் போன் போட்டு விசாரித்த அமித் ஷா.. முக்கிய ஆலோசனை!
Recommended Video
டெல்லி: நேற்று ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அது தொடர்பாக டெல்லி கமிஷ்னர் அமுல்யா பட்நாயக் உடன் ஆலோசனை செய்துள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் தாக்கப்பட்டது நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது..
நேற்று மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் மாணவர்கள் மிக மோசமாக காயம் அடைந்தனர். 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கண்டனம் தெரிவித்தது
இந்த தாக்குதலை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடுமையாக கண்டித்து இருக்கிறது. மாணவர்கள் மீதான இப்படிப்பட்ட தாக்குதலை ஏற்க முடியாது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும். மாணவர்கள் கலவரம் செய்ய கூடாது என்று கூறியுள்ளனர்.

என்ன ஆலோசனை
இந்த தாக்குதல் தொடர்பாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆலோசனை நடத்தி இருக்கிறார். நேற்று டெல்லி போலீஸ் அதிகாரிகளை அழைத்த அவர், அவர்களுடன் ஆலோசனை செய்துள்ளார். டெல்லி போலீஸ் கமிஷ்னர் அமுல்யா பட்நாயக் உடன் இவர் ஆலோசனை செய்தார்.

டெல்லி போலீஸ்
டெல்லி போலீஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ்தான் டெல்லி போலீஸ் இயங்கி வருகிறது. நேற்றைய கலவரத்திற்கு டெல்லி போலீசும் காரணம் என்று மாணவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

அமித் ஷா எப்படி
அமித் ஷாவின் இந்த ஆலோசனைக்கு பின் டெல்லி போலீசார் நேரடியாக ஜேஎன்யூ வளாகம் சென்றனர். அங்கு அவர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். மேற்கொண்டு தாக்குதல்களை நிறுத்தும் வகையில் அவர்கள் அங்கேயே பேரணி நடத்தினார்கள்.












Click it and Unblock the Notifications