டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது திட்டமிட்ட தாக்குதல்.. ஏபிவிபியை சேர்ந்தவர்கள்தான் எங்களை தாக்கினர்.. ஜேஎன்யு மாணவர் சங்க தலைவர்

Google Oneindia Tamil News

Recommended Video

    3 premier universities affected by police and masked men

    டெல்லி: இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஷ் கோஷ் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

    டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் நேற்று இரவு ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

    இதில் மாணவர் சங்க தலைவரான ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது. மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     ஹிட்லர் ஆட்சியில் நடந்ததுதான் இப்போது இந்தியாவில் நடக்கிறது.. எச்சரிக்கும் நோபல் வெற்றியாளர் அபிஜித் ஹிட்லர் ஆட்சியில் நடந்ததுதான் இப்போது இந்தியாவில் நடக்கிறது.. எச்சரிக்கும் நோபல் வெற்றியாளர் அபிஜித்

    தாக்குதல்

    தாக்குதல்

    இதுகுறித்து காயமடைந்த ஆயிஷ் கோஷ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நேற்று இரவு தாக்குதல் நடந்தது. இது கண்டனத்துக்குரியது.

    தாக்குதல்

    தாக்குதல்

    பல்கலைக்கழக துணை வேந்தரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் எங்களை தாக்கினர். மேலும் ஆர் எஸ் எஸ் கொள்கைகளை பின்பற்றும் பேராசிரியர்களும் தாக்குதல் நடத்த வழிவகுத்து தந்தனர். எங்கள் மீதான தாக்குதலின் போது பெயரைச் சொல்லியே தாக்கினர்.

    எதிர்பார்க்கவில்லை

    எதிர்பார்க்கவில்லை

    பல்கலைக்கழகத்தில் 4 நாட்களாக அசாதாரண சூழல் நிலவியது. காவலாளிகளுக்கும் தாக்கியவர்களுக்கும் ஏற்கெனவே தொடர்புண்டு. கண்மூடித்தனமாக தாக்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

    காவலாளிகள்

    காவலாளிகள்

    இது ஒரு திட்டமிட்ட தாக்குதல். சபர்மதி விடுதியில் போராட தயாராக இருந்த போது தாக்கினர். ஜனநாயக வழி போராட்டம் குறித்து பேராசிரியர்கள் வலியுறுத்தினர். உருட்டுகட்டை, கிரிக்கெட் மட்டை, சுத்தியல், கம்பிகளாலும் எங்களை தாக்கினர். வன்முறையாளர்களை காவலாளிகள் யாரும் தடுக்கவில்லை என்றார்.

    English summary
    Jawaharlal Nehru University Student Union (JNUSU) President Aishe Ghosh says its a pre planned attack on students.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X