விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள்-மத்திய அரசு புகார்- அறிக்கை கேட்கும் சுப்ரீம்கோர்ட்
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதனை உறுதி செய்து விரிவான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே உத்தரவிட்டார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தியது. இன்றைய விசாரணையின் போது பிரச்சனைக்கு தீர்வு காண முழு அமைத்தல், டெல்லிக்குள் போராட்டம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதிப்பது உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.

இந்த விசாரணையில் பங்கேற்ற மூத்த வழக்கறிஞர் பிஎஸ் நரசிம்ஹா, சீக்கியர்களுக்கு நீதி கோரும் அமைப்பு இப்போராட்டத்துக்கு நிதி திரட்டுகிறது என குற்றம்சாட்டினார். இதை கேட்ட தலைமை நீதிபதி, அட்டர்னி ஜெனரல் அறிக்கையிலும் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் டெல்லி போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், டெல்லி போராட்டங்களில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கின்றனர் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். பின்னர் இது தொடர்பாக விரிவான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரலுக்கு தலைமை நீதிபதி போப்டே உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications