விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள்-மத்திய அரசு புகார்- அறிக்கை கேட்கும் சுப்ரீம்கோர்ட்
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதனை உறுதி செய்து விரிவான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே உத்தரவிட்டார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தியது. இன்றைய விசாரணையின் போது பிரச்சனைக்கு தீர்வு காண முழு அமைத்தல், டெல்லிக்குள் போராட்டம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதிப்பது உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.

இந்த விசாரணையில் பங்கேற்ற மூத்த வழக்கறிஞர் பிஎஸ் நரசிம்ஹா, சீக்கியர்களுக்கு நீதி கோரும் அமைப்பு இப்போராட்டத்துக்கு நிதி திரட்டுகிறது என குற்றம்சாட்டினார். இதை கேட்ட தலைமை நீதிபதி, அட்டர்னி ஜெனரல் அறிக்கையிலும் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் டெல்லி போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், டெல்லி போராட்டங்களில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கின்றனர் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். பின்னர் இது தொடர்பாக விரிவான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரலுக்கு தலைமை நீதிபதி போப்டே உத்தரவிட்டார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications