குல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: குல்பூஷன் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து, சர்வதேச நீதிமன்ற நீதிபதி அப்துல் யூசூப் உத்தரவிட்டுள்ளார்.
குல்பூஷன் ஜாதவ் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்யவும் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு, பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரியான, குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில், இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.
I wholeheartedly welcome the verdict of International Court of Justice in the case of Kulbhushan Jadhav. It is a great victory for India. /1
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 17, 2019
இதுகுறித்து, ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை, நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
I thank the Prime Minister Shri @narendramodi for our initiative to take Jadhav's case before International Court of Justice. /2
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 17, 2019
ஜாதவின் வழக்கை சர்வதேச நீதிமன்றத்தின் முன் எடுத்துச் செல்ல நாங்கள் எடுத்த முயற்சிக்கு, உறுதி துணையாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
I thank Mr.Harish Salve for presenting India's case before ICJ very effectively and successfully. /3
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 17, 2019
இந்தியாவின் வழக்கை ஐ.சி.ஜே முன் மிகவும் திறமையாகவும் வெற்றிகரமாகவும் முன்வைத்த திரு.ஹரிஷ் சால்வேவுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
I hope the verdict will provide the much needed solace to the family members of Kulbhushan Jadhav. /4
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 17, 2019
சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குல்பூஷண் ஜாதவின், குடும்ப உறுப்பினர்களுக்கு மிகுந்த ஆறுதலை அளிக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications