எல்லைக்குள் யாரும் நுழைய முயற்சிக்க மாட்டார்கள்.. ராஜ்நாத் சிங் சொன்ன மாஸ் காரணம்!
டெல்லி: எல்லையில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது. சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
நம் நாட்டின் எல்லையில் ராணுவ வீரர்கள் தாக்குப் பிடிக்க முடியாத கடுமையான குளிரிலும், சாதாரண கூடாரங்களில், எப்போது சீன ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் இருக்கின்றனர்... ஆனால் இந்த நிலமையில் பிரதமர் நரேந்திர மோடி 8,400 கோடி ரூபாய் செலவில் வாங்கிய விமானத்தில் சுற்றி பறந்து வருகிறார். இந்த நிலைமையிலும் சீனாவின் பெயரைக் கூட எடுக்க பயப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன இராணுவத்துடனான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதி குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். "நிலைமை இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது .... இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் நுழைகிறார்கள் என்ற கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை.

அவசியமில்லை
சீனாவுடன் தளபதி மட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. "இது எப்போது தீர்க்கப்படும் என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் நாங்கள் முயற்சி செய்கிறோம். அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டிய அவசியமில்லை

யாரும் நுழைய மாட்டார்கள்
"1962 முதல் 2013 வரை என்ன நடந்தது, நான் இதைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. எங்கள் படைகள் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் மிகுந்த தைரியத்துடன் செயல்படுகிறது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் (. பி.எல்.ஏ) இந்திய எல்லைக்குள் நுழைந்தது என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.. கால்வான் மோதலுக்குப் பிறகு, நான் ராணுவ வீரர்களைச் சந்தித்தேன். எங்கள் பிரதமரும் படையினரை சந்தித்தார். இனி எங்கள் எல்லைக்குள் யாரும் நுழைய முயற்சிக்க மாட்டார்கள் என்று என்னால் சொல்ல முடியும்" என்றார்.

பாகிஸ்தான் விரக்தி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீரின் (பி.ஓ.கே) ஒரு பகுதியான கில்ஜித் பல்திஸ்தான் 'தற்காலிக மாகாண அந்தஸ்தை' வழங்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முடிவை கடுமையாக விமர்சித்த ராஜ்நாத் சிங்,. உண்மையில் 370 வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தான் ஆக்கிரிமிப்பு காஷ்மீரில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கில்ஜித் பல்திஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவைச் சேர்ந்தவை. அவற்றின் அந்தஸ்தில் எந்த மாற்றத்தையும் எங்களால் ஏற்க முடியாது. 370 வது பிரிவை நீக்கிய பின்னர் பாகிஸ்தான் விரக்தியடைந்துள்ளது, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாத குழுக்கள் பயந்து போய் இருக்கின்றன" என்றார்.

ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் இம்ரான் கானை ராஜ்நாத் சிங் கடுமையாக விமர்சித்தார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு காரணம் பாகிஸ்தான் தான் என்று ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில். "40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டிற்கு பங்கு உள்ளதை என்பதை பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். போர் விமான விமானி அபிநந்தனை விடுவிக்காவிட்டால் இந்தியாவின் பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தான் பயந்துவிட்டது. . பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காகவே பாகிஸ்தானை FATF தடுப்புப்பட்டியலில் வைக்க வேண்டும்" இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications