லடாக், காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே- சீனாவுக்கு மத்திய அரசு பதிலடி
டெல்லி: லடாக், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களும் அருணாச்சல் பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி; இந்தியாவின் உள்விவகாரங்களில் சீனா தலையிட எந்த உரிமையும் கிடையாது என்று மத்திய அரசு பதிலடி தந்துள்ளது.
லடாக் கிழக்கு எல்லைகள் மோதல், ஊடுருவல்கள் தொடர்பாக இந்தியா- சீனா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியா- சீனா இடையே அக்டோபர் 12-ல் 7-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பாலங்கள் திறப்புக்கு எதிர்ப்பு
இந்தப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக இந்தியாவும் சீனாவும் கூட்டறிக்கையில் தெரிவித்திருந்தன. அதேநேரத்தில் எல்லை பகுதியில் புதிய பாலங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

லடாக் யூனியன் பிரதேசம்
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சீனாவின் வெளியுறவு அமைச்சகம், லடாக் யூனியன் பிரதேசத்தை இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கி உள்ளது. அருணாச்சல் பிரதேசத்தைப் போல லடாக் யூனியன் பிரதேசத்தையும் சீனா ஒருபோதும் அங்கீகரிக்காது என கூறியிருந்தது.

சீனாவுக்கு மத்திய அரசு பதிலடி
இதற்கு மத்திய அரசு இன்று பதிலடி கொடுத்துள்ளது. டெல்லியில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: லடாக், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். அதேபோல்தான் அருணாச்சல் பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே.

தலையிடும் உரிமை கிடையாது
இந்தியாவின் உள்விவகாரங்களில் சீனா தலையிட எந்தவித தார்மீக உரிமையும் முகாந்திரமும் கிடையாது. எல்லைப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுத் திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. பாதுகாப்பு நலன் கருதியும் எல்லைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அனுராக் ஶ்ரீவத்சவா கூறியுள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications