முதலில் சிபிஐ அவர்கள் வீட்டை சரிபடுத்தட்டும்.. ரஃபேல் வழக்கில் குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்
Recommended Video

டெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வலியுறுத்திய பொது நல வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதலில் சிபிஐ தனது வீட்டை சரியாக வைத்துக்கொள்ளட்டும் என கூறி குட்டு வைத்துள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோரும் சமூக செயல்பாட்டாளரும், வழக்கறிஞருமான, பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கும் இணைக்கப்பட்டு இன்று விசாரணை நடத்தியது உச்ச நீதிமன்றம்.

இன்று மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், யு.யு.லலித், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு, ரஃபேல் ஒப்பந்தத்திற்கான நடைமுறை மற்றும் விலை விவரத்தை சீலிட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில், இன்னும் 10 நாட்களுக்குள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
விசாரணையியன்போது வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிடுகையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், "அதற்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். முதலில் சிபிஐ அதன் வீட்டை ஒழுங்குபடுத்தட்டும்" என்று பதிலளித்தார்.
சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் நடுவே மோதல் ஏற்பட்டு அந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நீதிபதி இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications