கடைசி பந்தில் சிக்சர் அடிப்பது போல வாய்ப்பை பயன்படுத்துவோம்.. பாஜக எம்.பிக்களிடம் சொன்ன பிரதமர் மோடி
டெல்லி: எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில், பாஜகவின் பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எம்.பிக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே கடும் அமளி ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. இன்றைய விவாதத்தை மக்களவையில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தொடங்கி வைத்து பேசுவார் என்று தெரிகிறது.

அதேபோல், காங்கிரஸ் தரப்பில் மனீஷ் திவாரி, கவுரவ் கோகோய் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றவுள்ளதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் நிஷாந்த் துபே விவாதத்தின் முதல் நபராக பேசுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், பாஜக பாராளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாஜக எம்.பிக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி பேசுகையில் கடைசி பந்தில் சிக்சர் அடிப்பது போல எதிர்க்கட்சிகளுக்கு எதிரானதாக நம்பிக்கை இல்லா தீர்மான வாய்ப்பை பயன்படுத்துவோம் என்று கூறியதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications