1952-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை லோக்சபா சபாநாயகர்கள்.. 17 பேர் முழு விவரம்!
டெல்லி: 1952-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை லோக்சபா சபாநாயகர்களாக மொத்தம் 17 பேர் பதவி வகித்தனர்.
18-வது லோக்சபா சபாநாயகர் தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது. 18-வது லோக்சபா வரும் 24-ந் தேதி கூடுகிறது. ஜூன் 24, ஜூன் 25 ஆகிய இரு நாட்கள் தற்காலிக சபாநாயகரால் புதிய எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். இதனைத் தொடர்ந்து ஜூன் 26-ந் தேதி லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெறும். லோக்சபா சபாநாயகர் தேர்வுக்குப் பின்னர் ஜூன் 27-ல் நாடாளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

ஒவ்வொரு லோக்சபாவின் முதலாவது கூட்டத்தில்தான் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். சபாநாயகர் பதவி விலகாதவரை 5 ஆண்டுகாலத்துக்கும் அப்பதவியில் ஒருவரே தொடர்ந்து நீடிப்பார். லோக்சபாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானவர் சபாநாயகர்.
லோக்சபாவில் எந்த ஒரு தீர்மானத்தையும் சபாநாயகரின் அனுமதி இல்லாமல் கொண்டுவரவும் முடியாது. அரசின் மசோதாக்களை ஏற்பது, நிராகரிப்பது ஆகியவையும் சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது ஆகும். எம்பிக்கள் கட்சித் தாவல் விவகாரத்தில் சபாநாயகரின் முடிவுதான் அதிகாரம் கொண்டதாகும்.
லோக்சபா சபாநாயகராக இதுவரை பதவி வகித்தவர்கள் விவரம்:
கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர்
எம்.ஏ, அய்யங்கார்
சர்தார் உக்கம் சிங்
என். சஞ்சீவ ரெட்டி
ஜி.எஸ். தில்லான்
பலி ராம் பகத்
என். சஞ்சீவ ரெட்டி
கே.எஸ்.ஹெக்டே
பல்ராம் சாக்கர்
ரபி ராய்
சிவராஜ் பாட்டீல்
பி. ஏ. சங்மா
ஜி.எம்.சி. பாலயோகி
மனோகர் ஜோஷி
சோம்நாத் சட்டர்ஜி
மீரா குமார்
சுமித்ரா மகாஜன்
ஓம் பிர்லா












Click it and Unblock the Notifications