ராஜஸ்தானை நையப்புடைத்த வெட்டுக் கிளிகள்.. அடுத்து டெல்லிக்கு மிரட்டல்.. உ.பியிலும் உஷார் நிலை!
டெல்லி: ராஜஸ்தானில் பயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகள் தற்போது டெல்லியை நோக்கி படையெடுக்கக் கூடும் என வேளாண் நிபுணர்கள் தெரிவித்தனர்.
Recommended Video
ராஜஸ்தான், குஜராத்,மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து அங்குள்ள பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
பாலைவனப் பகுதிகளை ஒட்டிய நாடுகளான ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கும் 4 கோடி வெட்டுக்கிளிகள் ஒரே நாள் 80, 500 கிலோ வேளாண் பயிர்களை உணவாக உட்கொள்ளும்.

ஜெய்ப்பூர்
இது ஒரு நாளில் 35,000 மனிதர்கள் உண்ணும் உணவிற்கு சமமாகும். ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை சமாளிக்க டிரோன் மூலம் பூச்சிக்கொல்லிகள் அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது போல் இன்று ஜெயப்பூர் மாவட்டத்தில் சோமு என்ற இடத்தில் ஆளில்லா விமானம் மூலம் பூச்சிக் கொல்லி மருந்துகள் அடிக்கப்பட்டன.

விமானம்
இதுகுறித்து அந்த மாநில வேளாண்துறை அதிகாரி கூறுகையில் இன்று ஒரு ஆளில்லா விமானத்தை வாடகைக்கு வாங்கி பூச்சிக் கொல்லி அடிக்கும் பணியை தொடங்கியுள்ளோம். அடுத்து வரும் நாட்களில் இன்னும் பல ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும். 2.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் விமானம் மூலம் பூச்சிக் கொல்லியை தெளிக்க 15 நிமிடங்களாகிறது என்றார்.

வயல்கள்
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி நுழைந்த இந்த வெட்டுக்கிளிகள் மாநிலத்தின் பாதிக்கும் மேலான மாவட்டங்களை ஆக்கிரமித்துள்ளது. வெகு தூர பகுதிகளுக்கு உணவு தேடி சென்ற வெட்டுக்கிளிகள் வயல்களில் பயிர்கள் இல்லாததால் ஜெய்ப்பூர், கரௌலிக்கு திரும்பி வந்துவிட்டது. வெட்டுக்கிளி கூட்டம் தேசிய தலைநகரான டெல்லிக்கும் படையெடுக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர்
டெல்லியில் 22 சதவீதம் இடங்கள் பச்சை பசேல் என காட்சி அளிப்பதால் அவை உணவுக்காக இங்கும் வரும். காற்றின் வேகமும் திசையும் அவற்றுக்கு சார்பாக இருந்தால் அவை இன்னும் சில நாட்களில் தேசிய தலைநகரை நோக்கி படையெடுக்கும் என தெரிவித்தனர்.

வெட்டுக்கிளி
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மஹோபா மற்றும் ஜான்சி ஆகிய மாவட்டங்களில் வெட்டுக்கிளி கூட்டங்கள் வந்துள்ளதால் அந்த மாநிலத்தில் 10 மாவட்டங்களின் நிர்வாகங்கள் பூச்சிக் கொல்லி தெளிப்பான்கள் உள்ளிட்டவைகளுடன் உஷார் நிலையில் உள்ளன. இதனால் வெட்டுக்கிளி அண்டைய மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திற்கு வந்துவிட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications