ராஜஸ்தானை நையப்புடைத்த வெட்டுக் கிளிகள்.. அடுத்து டெல்லிக்கு மிரட்டல்.. உ.பியிலும் உஷார் நிலை!
டெல்லி: ராஜஸ்தானில் பயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகள் தற்போது டெல்லியை நோக்கி படையெடுக்கக் கூடும் என வேளாண் நிபுணர்கள் தெரிவித்தனர்.
Recommended Video
ராஜஸ்தான், குஜராத்,மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து அங்குள்ள பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
பாலைவனப் பகுதிகளை ஒட்டிய நாடுகளான ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கும் 4 கோடி வெட்டுக்கிளிகள் ஒரே நாள் 80, 500 கிலோ வேளாண் பயிர்களை உணவாக உட்கொள்ளும்.

ஜெய்ப்பூர்
இது ஒரு நாளில் 35,000 மனிதர்கள் உண்ணும் உணவிற்கு சமமாகும். ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை சமாளிக்க டிரோன் மூலம் பூச்சிக்கொல்லிகள் அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது போல் இன்று ஜெயப்பூர் மாவட்டத்தில் சோமு என்ற இடத்தில் ஆளில்லா விமானம் மூலம் பூச்சிக் கொல்லி மருந்துகள் அடிக்கப்பட்டன.

விமானம்
இதுகுறித்து அந்த மாநில வேளாண்துறை அதிகாரி கூறுகையில் இன்று ஒரு ஆளில்லா விமானத்தை வாடகைக்கு வாங்கி பூச்சிக் கொல்லி அடிக்கும் பணியை தொடங்கியுள்ளோம். அடுத்து வரும் நாட்களில் இன்னும் பல ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும். 2.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் விமானம் மூலம் பூச்சிக் கொல்லியை தெளிக்க 15 நிமிடங்களாகிறது என்றார்.

வயல்கள்
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி நுழைந்த இந்த வெட்டுக்கிளிகள் மாநிலத்தின் பாதிக்கும் மேலான மாவட்டங்களை ஆக்கிரமித்துள்ளது. வெகு தூர பகுதிகளுக்கு உணவு தேடி சென்ற வெட்டுக்கிளிகள் வயல்களில் பயிர்கள் இல்லாததால் ஜெய்ப்பூர், கரௌலிக்கு திரும்பி வந்துவிட்டது. வெட்டுக்கிளி கூட்டம் தேசிய தலைநகரான டெல்லிக்கும் படையெடுக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர்
டெல்லியில் 22 சதவீதம் இடங்கள் பச்சை பசேல் என காட்சி அளிப்பதால் அவை உணவுக்காக இங்கும் வரும். காற்றின் வேகமும் திசையும் அவற்றுக்கு சார்பாக இருந்தால் அவை இன்னும் சில நாட்களில் தேசிய தலைநகரை நோக்கி படையெடுக்கும் என தெரிவித்தனர்.

வெட்டுக்கிளி
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மஹோபா மற்றும் ஜான்சி ஆகிய மாவட்டங்களில் வெட்டுக்கிளி கூட்டங்கள் வந்துள்ளதால் அந்த மாநிலத்தில் 10 மாவட்டங்களின் நிர்வாகங்கள் பூச்சிக் கொல்லி தெளிப்பான்கள் உள்ளிட்டவைகளுடன் உஷார் நிலையில் உள்ளன. இதனால் வெட்டுக்கிளி அண்டைய மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திற்கு வந்துவிட்டது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications