லோக்சபா தேர்தலுக்கு முந்தைய காலிறுதி கேம்-4: தென்னிந்தியாவின் ஒரே மாநிலம் கர்நாடகாவையும் இழந்த பாஜக!
டெல்லி: தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முந்தைய இறுதி ஆட்டம்- செமி பைனல் போல இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. லோக்சபா தேர்தலுக்கான காலிறுதி ஆட்டமாக கருதப்படும் கர்நாடகா தேர்தலில் என்ன நடந்தது?
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 113 இடங்கள். கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் பிரதான அரசியல் கட்சிகளாக களத்தில் இருக்கின்றன.

2018-ம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபைதான் அமைந்தது. பாஜக 104, காங்கிரஸ் 80, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வென்றன. இதனையடுத்து காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து 117 எம்.எல்.ஏக்களுடன் புதிய கூட்டணி ஆட்சியை அமைத்தது.
ஆட்சி கவிழ்ப்பும் பாஜக அரசும்: கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவி ஏற்றார். ஆனால் 2019-ல் கட்சி தாவல்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா களேபரங்களால் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தது. தென்னிந்தியாவிலேயே கர்நாடகாவில் மட்டும்தான் பாஜக செல்வாக்கு பெற்றிருக்கிறது.
2003 தேர்தல் முடிவுகள்: இந்தப் பின்னணியில் 2023-ம் ஆண்டு மே மாதம் கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக மிக மோசமான தோல்வியைத் தழுவியது. அதேபோல மதச்சார்பற்ற ஜனதா தளமும் பெரும் பின்னடைவை சந்தித்தது. 2023 தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களிலும் பாஜக 66 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 17 இடங்களிலும் வென்றன. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட கூடுதல் இடங்களைப் பெற்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது காங்கிரஸ்.
தேர்தல் வாக்குறுதிகள்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க காரணமாக இருந்தது அதிரடியான தேர்தல் வாக்குறுதிகள்தான். இதனால் ஆட்சியில் அமர்ந்த உடனேயே காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் செய்தது. இந்த பார்முலாவைத்தான் அப்படியே தெலுங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் செயல்படுத்தி வருகிறது.
தெலுங்கானாவில் கை கொடுக்குமா?: கர்நாடகா மாநில மக்கள் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி காங்கிரஸுக்கு வாக்களித்தனர். தெலுங்கானாவிலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கின்றன களநிலவரங்கள். இதனால் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்கிற பெருநம்பிக்கையில் அக்கட்சித் தலைவர்கள் இருக்கின்றனர். தற்போதைய அரை இறுதி ஆட்டமான செமிபைனல் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் இந்த பார்முலாவை காங்கிரஸ் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. இது கை கொடுத்தால் லோக்சபா தேர்தலுக்கும் இதே வியூகத்தை காங்கிரஸ் கையில் எடுக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications