2024 லோக்சபா தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும்.. தமிழ்நாட்டில் எப்படி? 2019 அட்டவணை முழு விவரம்
டெல்லி: லோக்சபா தேர்தல் 7 முதல் 8 கட்டங்களாக நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. எனவே, இம்முறையும் அதேபோலவே தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த லோக்சபா தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையர்கள் தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள்.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 அல்லது 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 97 கோடி பேர் 18-வது லோக்சபா தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.
தமிழகத்தில் எப்படி?: தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, ஆந்திரா, குஜராத், ஹரியானா, தெலுங்கானா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 6 முதல் 7 கட்டங்களாகவும் 48 தொகுதிகளை கொண்ட மகராஷ்டிராவில் 4 முதல் 5 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் எப்படி?: மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்கள் வரையும் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படலாம் என்று தெரிகிறது. ஏப்ரல் 16 முதல் மே 26 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் லோக்சபா தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.
கடந்த 2019-லோக்சபா தேர்தலை பொறுத்தவரை 7 கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 11 முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதியும் 7-வது கட்ட தேர்தல் மே 19 ஆம் தேதியும் நடைபெற்றது. ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்ற 2-வது கட்ட தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
எப்போது வாக்கு எண்ணிக்கை: மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. எனவே, 18-வது லோக்சபா தேர்தலும் 7 அல்லது 8 கட்டங்களாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் புதிய திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்க முடியாது. ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்களை செயல்படுத்த தடையில்லை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications