நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்.. லோக்சபா எம்பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம்.. விஷயம் இதுதான்
டெல்லி: லோக்சபாவில் எம்.பிக்கள் இடைநீக்கம் செய்ததையும் பாதுகாப்பு விதிமீறல் சம்பவத்தையும் சில உறுப்பினர்கள் தொடர்பு படுத்தி பேசுவது துரதிர்ஷ்டவசமானது என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் கடந்த 13-ந் தேதி மிகப்பெரும் பாதுகாப்பு விதி மீறல் சம்பவம் நடைபெற்றது. லோக்சபாவின் பார்வையாளர் மாடத்தில் இருந்து சபைக்குள் குதித்த 2 வாலிபர்கள், வண்ண புகை குப்பிகளை வீசினர். அதேபோல நாடாளுமன்ற வளாகத்திலும் சிலர் ரகளை செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜாவை காவலில் எடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நாட்டின் ஜனநாயக கோவில் என்று வர்ணிக்கப்படும் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வண்ணக்குப்பிகளை வீசியது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பாதுகாப்பு குளறுபடியை உணர்த்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இந்த நிலையில், அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் உள்பட மொத்தம் 13 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா நடவடிக்கை எடுத்தார். சபாநாயகரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், லோக்சபா எம்.பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஓம் பிர்லா கூறியிருப்பதாவது:- எம்.பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டது முழுக்க முழுக்க அவையின் கண்ணியத்தை நிலைநாட்டுவதற்காகத்தான். புதிய நாடாளுமன்ற அவை துவக்க விழாவின் போது, அவைக்குள் பதாகைகளை கொண்டு வருவது இல்லை.
அவையின் மையப்பகுதிக்குள் வந்து அமளியில் ஈடுபடுவது என தீர்மானித்தோம். உறுப்பினர்களின் அவசியமற்ற நடத்தைகளையும் அவை இடையூறு செய்யப்படுவதையும் நாட்டு மக்கள் விரும்புவது இல்லை என்று நாம் அனைவரும் அறிவோம்" என்று கூறியுள்ளார்.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா












Click it and Unblock the Notifications