நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்.. லோக்சபா எம்பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம்.. விஷயம் இதுதான்
டெல்லி: லோக்சபாவில் எம்.பிக்கள் இடைநீக்கம் செய்ததையும் பாதுகாப்பு விதிமீறல் சம்பவத்தையும் சில உறுப்பினர்கள் தொடர்பு படுத்தி பேசுவது துரதிர்ஷ்டவசமானது என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் கடந்த 13-ந் தேதி மிகப்பெரும் பாதுகாப்பு விதி மீறல் சம்பவம் நடைபெற்றது. லோக்சபாவின் பார்வையாளர் மாடத்தில் இருந்து சபைக்குள் குதித்த 2 வாலிபர்கள், வண்ண புகை குப்பிகளை வீசினர். அதேபோல நாடாளுமன்ற வளாகத்திலும் சிலர் ரகளை செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜாவை காவலில் எடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நாட்டின் ஜனநாயக கோவில் என்று வர்ணிக்கப்படும் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வண்ணக்குப்பிகளை வீசியது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பாதுகாப்பு குளறுபடியை உணர்த்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இந்த நிலையில், அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் உள்பட மொத்தம் 13 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா நடவடிக்கை எடுத்தார். சபாநாயகரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், லோக்சபா எம்.பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஓம் பிர்லா கூறியிருப்பதாவது:- எம்.பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டது முழுக்க முழுக்க அவையின் கண்ணியத்தை நிலைநாட்டுவதற்காகத்தான். புதிய நாடாளுமன்ற அவை துவக்க விழாவின் போது, அவைக்குள் பதாகைகளை கொண்டு வருவது இல்லை.
அவையின் மையப்பகுதிக்குள் வந்து அமளியில் ஈடுபடுவது என தீர்மானித்தோம். உறுப்பினர்களின் அவசியமற்ற நடத்தைகளையும் அவை இடையூறு செய்யப்படுவதையும் நாட்டு மக்கள் விரும்புவது இல்லை என்று நாம் அனைவரும் அறிவோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications