முதல் கட்டத்திலேயே 39 தொகுதிகளுக்கும் தேர்தல் வைச்சிடுங்க… அதிமுக கோரிக்கை
Recommended Video
டெல்லி:லோக்சபா தேர்தலின் முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இன்னும் சில மாதங்களில் 2019-ம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயராகி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைகளும் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.
தமிழக சட்டசபையில் வரும் 8-ம் தேதி இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் மாலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான பணிகள், கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட உள்ளது. இந் நிலையில் லோக்சபா தேர்தலின் முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
அதிமுக எம்பிக்களான தம்பிதுரை, வேணுகோபால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பான மனுக்களை அளித்து உள்ளனர். குடிநீர் பிரச்னையை காரணம் காட்டி தமிழகத்திற்கு முதல் கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.