திடீரென குலுங்கிய பூமி.. லாயல்டி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை
டெல்லி: பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள லாயல்டி தீவு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 7.1 என இந்த நிலநடுக்கம் பதிவான நிலையில் அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
பசிபிக் பெருங்கடலின் ஓர் அங்கமாக நியூ கலிடோனியா தீவுகள் உள்ளன. இது மூன்று நிர்வாக பிரிவாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நேற்று நியூ கலிடோனியா தீவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து நியூ கலிடோனியாவில் பிஜூ, வானட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் தான் நியூ கலிடோனியாவின் கிராண்டே டெர்வேவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள லாயல்டி தீவில் 2 வது நாளாக இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இது முந்தைய நிலநடுக்கத்தை காட்டிலும் சக்தி குறைந்ததாக உள்ளது.
மேலும் லாயல்டி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அந்த நிறுவனம், ‛‛லாயல்டி தீவில் 2வது நாளாக 2வது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை இல்லை. இந்த நிலநடுக்கம் அங்குள்ள கடிகாரத்தின் அடிப்படையில் மதியம் 2 மணிக்கு பதிவானது. 45 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலை கொண்டு இருந்தது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications