கும்பமேளாவில் பயங்கரம்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட யூடியூபரை சரமாரியாக வெளுத்த சாது- அதிர்ச்சி வீடியோ
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் நடைபெற்றும் கும்பமேளாவில் பங்கேற்ற சாது (சாமியார்) ஒருவரிடம் அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டதால் ஆத்திரம் அடைந்த அவர் யூடியூபரை சரமாரியாக தாக்கி துரத்திவிடும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உ.பி. மாநிலம் பிரக்யாராஜில் இன்று முதல் 45 நாட்களுக்கு மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இன்றைய முதல் நாள் மட்டும் 40 லட்சம் முதல் 50 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். இதேபோல ஏராளமான சாதுக்களும் அகோரிகளும் மகா கும்பமேளா என்பதால் பிரக்யாராஜில் டெண்ட் அமைத்து முகாமிட்டுள்ளனர்.

இப்படி டெண்ட் அமைத்து முகாமிட்டுள்ள சாமியார் ஒருவரை பேட்டி எடுக்கச் சென்றார் யூடியூபர். அவரிடம் அடுத்தடுத்து யூடியூபர் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். இதில் கோபம் அடைந்த சாமியார், தம் வசம் இருந்த கத்தி போன்ற இரும்பு கம்பியால் யூடியூபரை சராமரியாக தாக்கி துரத்திவிட்டார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications