வார இறுதியில் வேலை செய்ய மறுத்த ஊழியர்.. கோபமாகி ‛பாஸ்’ கூறிய வார்த்தை! யாருமே எதிர்பாராத ட்விஸ்ட்
டெல்லி: டெல்லியில் வாரயிறுதி நாட்களில் வேலை செய்ய முடியாது எனக்கூறிய ஊழியரை அந்த நிறுவனத்தின் ஓனர் கெட்டவார்த்தையில் திட்டி உள்ளார். இதையடுத்து அந்த ஊழியர் எடுத்து முடிவு குறித்து ரெடிட் வலைதள பக்கத்தில் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி உள்ளது.
ஒருநாளுக்கு தொழிலாளர், ஊழியர்களுக்கு 8 மணிநேர பணியை தான் ஒதுக்க வேண்டும். அதற்கு மீறி பணி கொடுக்கப்பட்டால் கூடுதல் சம்பளம், மாற்று விடுமுறை என்பது வழங்க வேண்டும். ஆனால் பல நிறுவனங்களில் இதனை பின்பற்றுவது இல்லை.

ஊழியர்கள், தொழிலாளர்களை 8 மணிநேரம் தாண்டி 12 மணிநேரம், ஏன் 15 மணிநேரம் கூட வேலை வாங்குகின்றனர். குறிப்பாக வார விடுமுறை, வார இறுதி நாட்களில் கூடுதல் நேரம் பணி செய்ய கூறும் வழக்கம் பல நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளது. இது ஊழியர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கும்.
இப்படியான சூழலில் தான் ரெடிட் வலைதள பக்கத்தில் பலரும் தங்களின் பணி அனுபவம், அலுவலகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய பதிவுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது டெல்லியில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வீடியோ எடிட்டராக பணியாற்றி ஊழியர் தான் எதிர்கொண்ட பிரச்சனையை பகிர்ந்துள்ளார்.
அதாவது டெல்லியில் தனியாருக்கு சொந்தமான மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒருவர் வீடியோ எடிட்டராக பணிக்கு சேர்ந்தார். இவர் தான் தற்போது மனக்குமுறலை கூறியுள்ளார். இதுபற்றி அவர், ‛‛டெல்லியில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வீடியோ எடிட்டராக பணியாற்றினேன். இந்த நிறுவனத்தில் இன்ஸ்டாகிராமில் பணி சூழல் பற்றி நன்றாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் நம்பிபோய் அந்த நிறுவனத்தில் சேர்ந்தேன். ஆனால் நான் சேர்ந்த சில வாரங்களிலேயே பணி சூழல் என்பது மாற தொடங்கியது. சம்பவத்தன்று வீடியோ ஒன்றை 55 நிமிடத்தில் எடிட் செய்து அலுவலக நேரமான இரவு 7.30 மணிக்கு வழங்கினேன். ஆனால் இரவு 8.30 மணிக்கு சில மாற்றங்களை செய்யும்படி கூறினார்கள். நாளை மதியத்துக்குள் இது வேண்டும். அதனால் மாற்றம் செய்து தாருங்கள் என்று பாஸ் கூறினார்.
நான் ‛‛இப்போது பணி செய்தால் வாரஇறுதி நாட்களில் வேலைக்கு வரமாட்டேன். நான் எனது புராஜெக்ட் பைலை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறினேன். அதற்கு, ‛‛இது எந்த மாதிரியான F*****g பதில்?'' என்று பாஸ் கேட்டார். அதற்கு ஊழியர், நான் வீக்எண்ட்டில் பணி செய்ய மாட்டேன் என்று மீண்டும் பதிலளித்தார். அதற்கு பாஸ், "வாவ்.. வாவ்" என்று பதிலளித்தார். இந்த வார்த்தைகள் என்னை வேலையை விட்டு நிற்க வைத்துள்ளது என்று அந்த நபர் கூறியுள்ளார்.
இந்த பதிவில் அவரது பாஸுக்கும், ஊழியருக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் சாட் தொடர்பான ஸ்கீரின்ஷாட் இணைக்கப்பட்டு இருந்து. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் வீடியோ எடிட்டருக்கு ஆதரவாகவும், அவரது பாஸுக்கு எதிராகவும் கருத்துகளை கூறி வருகின்றனர்.
-
IT JOBS: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. இந்த வேலைவாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க -
ஐடி துறைக்கு தான் ஆப்பு..10000 பேர் கனவில் மண்ணை அள்ளிப் போட்ட டெல்! இன்னும் தலைக்கு மேல் கத்தி தான் -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை












Click it and Unblock the Notifications