ராகுல் காந்தி உடனே தலைவராகனும்.. தீர்மானம் போட்ட டெல்லி காங்கிரஸ்!
டெல்லி : காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறத்தி டெல்லி காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று 2019 ம் ஆண்டு, காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதற்கு பிறகு, கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பலர் பேச்சுவார்த்தை நடத்தியும், அதனை ஏற்க மறுத்து பிடிவாதமாக இருந்து வருகிறார் ராகுல் காந்தி.

இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் தமிழகம், மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் சார்பிலும் இதே போன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறை கட்சி ஆலோசனை கூட்டம் கூடும் போதும் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, முகுல் வாஷ்னிக், ப.சிதம்பரம் ஆகியோரும் கட்சி தலைமையிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ராகுல் காந்தியோ இப்போது வரை, ஒருமுறை முடிவு செய்தால் எப்போதும் அது தான். மாற்ற முடியாது என கூறி வருகிறார். இதனால் கட்சி நிர்வாகிகள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications