Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீரவ் மோடி, லலித் மோடி நினைவிருக்கா? தப்ப விட்டவர் மோடி.. ராகுல் காந்திக்கு மாணிக்கம் தாகூர் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோடி குறித்து அவதூறு பரப்பியதாக கூறி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், நீரவ் மோடி, லலித் மோடியை திருடர்கள் என்று அழைப்பதில் என்ன தவறு உள்ளது என்று விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியபோது பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் "மோடி" என்ற துணை பெயரை குறிப்பிட்டு ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். நாடு முழுவதும் அவரது பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி மீது வழக்கு

ராகுல் காந்தி மீது வழக்கு

ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடி சமூகம் மீது அவதூறாக பேசியதாக கூறி அதனை எதிர்த்து குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். சூரத் நீதிமன்றத்தில் சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

சூரத் நீதிமன்றம்

சூரத் நீதிமன்றம்

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். சூரத் நகருக்கு வந்த அவருக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு

காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு

சூரத் நகரம் முழுவதும் நாங்கள் ராகுல் காந்திக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறி காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர். இந்துஸ்தானின் சிங்கம் ராகுல் காந்தி என்று அவர்கள் குறிப்பிட்டனர். ராகுல் காந்தி செல்லும் வழி நெடுகிலும் காங்கிரஸ் பாஜகவின் சர்வாதிகாரத்துக்கு பணியாது என்று அக்கட்சியினர் பதாகைகளை ஏந்தி வரவேற்பு தெரிவித்தனர்.

குற்றவாளி என தீர்ப்பு

குற்றவாளி என தீர்ப்பு

சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் இத்தகைய வரவேற்புக்கு மத்தியில் ராகுல் காந்தி ஆஜரான நிலையில், அவதூறு வழக்கில் அவரை குற்றவாளி என மாஜிஸ்திரேட் வர்மா தீர்ப்பு வழங்கினார். அவருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியது.

ராகுல் காந்தி கருத்து

ராகுல் காந்தி கருத்து

இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ராகுல் காந்தி, ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "என்னுடைய மதம் அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்தது. உண்மையே எனது கடவுள். அதை அடைவதற்கான வழியே அகிம்சை." என குறிப்பிட்டு இருக்கிறார்.

மாணிக்கம் தாகூர் ட்வீட்

மாணிக்கம் தாகூர் ட்வீட்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், நீரவ் மோடியை திருடன் என்று சொல்வதில் என்ன தவறு? லலித் மோடியை திருடன் என்று சொல்வதில் என்ன தவறு? யார் அவர்களை தப்பிக்க விட்டது? மோடிதான் அனுமதித்தார். ராகுல் காந்தி உண்மையாக காந்தியை பின்பற்றுபவர். ராகுல் காந்தி = நம்பிக்கை. ராகுல் காந்தியுடன் நாங்கள் நிற்கிறோம்." என்று பதிவிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+