மணிப்பூர் டூ நாகாலாந்து.. மாற்றம் செய்யப்பட்ட ஆளுநர் இல.கணேசன்.. ஜனாதிபதி முக்கிய உத்தரவு!
மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசம் நாகாலாந்து ஆளுநராக மாற்றம்.
டெல்லி: மணிப்பூர் மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இல.கணேசன், நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் கொள்கையை ஆழமாக கடைபிடித்து வரும் இல.கணேசன், அரசியல் பொதுவாழ்வு காரணமாக திருமணம் கூட செய்து கொள்ளாமல் அண்ணன் குடும்பத்தினருடன் இணைந்து வாழ்ந்து வருபவர்.
பாஜக மூத்த தலைவரான இல கணேசன், மாநிலங்களவை உறுப்பினராகவும், தமிழ்நாடு பாஜக தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வந்த இல கணேசன், பதவிக்காலம் முடியும் முன்னரே கடந்த 2021ஆம் ஆண்டு, மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், இல கணேசன் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

கூடுதல் பொறுப்பு
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த ஜகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல கணேசன், மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக பெற்றார். இதனையடுத்து மணிப்பூர், மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பையும் இல கணேசன் கவனித்து வந்தார்.

சுமூக உறவு
இதனிடையே தனது அண்ணன் கோபாலனின் 80வது பிறந்தநாளை சென்னையில் வெகு விமரிசையாக நடத்தினார் இல.கணேசன். இதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களை அழைத்து வந்து விழாவில் முன்னிலைப்படுத்தினார். பாஜகவை தீவிரமாக எதிர்த்து வந்த மம்தா பானர்ஜியுடன் சுமூக உறவை இல.கணேசன் கையாண்டது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.

இல.கணேசன் மாற்றம்
இந்த நிகழ்வுக்கு பின், அடுத்த சில வாரங்களில் மேற்கு வங்க ஆளுநராக ஆனந்த் போஸ் நியமிக்கப்பட்டார். இதனால் மணிப்பூர் மாநில ஆளுநராக மட்டும் இல.கணேசன் பணியை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் மணிப்பூர் மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த இல.கணேசன், தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆளுநராகும் சிபி ராதாகிருஷ்ணன்
13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் தமிழ்நாடு பாஜக தலைவராகப் பணியாற்றிய சிபி ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியின் ராஜினாமாவும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications