காஷ்மீர் மக்களே! தனி நாடு கோராதீர்.. இந்தியா- பாகிஸ்தான் இணைப்பை கேளுங்கள்.. கட்ஜு
டெல்லி: தனி காஷ்மீர் வேண்டும் என காஷ்மீர்வாசிகள் கூறுவது தவறு. அதற்கு பதிலாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைய வேண்டும் என விரும்புங்கள் என உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற மூத்த நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் காஷ்மீர் மக்களே உங்கள் முதுகில் ஏறி அரசியல்வாதிகளும் பிரிவினைவாத தலைவர்களும் சவாரி செய்கின்றனர். தீவிரவாதிகள் தைரியசாலிகள்தான். ஆனால் அவர்களுக்கு மண்டையில் ஒன்றும் இல்லை.

நடைமுறை சாத்தியங்கள் எதையும் அறியாமல் நீங்கள் பாட்டுக்கு சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல் தனிநாடு கோருமாறு கற்பிக்கப்பட்டுள்ளீர்கள். காஷ்மீர் மக்கள் மீது இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்களை நான் எப்போதும் கண்டித்துள்ளேன்.
ஆனால் தனி நாடு என்ற உங்களது முழக்கம் தவறு. அதற்கு பதிலாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை வையுங்கள். மதவாதத்தையும் சகிப்புத்தன்மையின்மையும் மதசார்பற்ற அரசால் பொறுத்து கொள்ள முடியாது. இந்துவாக இருந்தாலும் சரி முஸ்லிமாக இருந்தாலும் சரி அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்தாலே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்ப்பு காணப்படும். இது ஒன்றுதான் தீர்வு. மதசார்பற்ற இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்க வேண்டும். இந்திய ஒருங்கிணைப்பு சங்கத்தை அண்மையில் ஏற்படுத்தியுள்ளோம். அதன் தலைவர் காஷ்மீரியான நான்தான்.
indianreunificationassociation.weebly.com என்பதுதான் எங்கள் அமைப்பின் இணையதள பக்கமாகும். இதற்கு பேஸ்புக் பக்கமும் உண்டு. இந்தியாவும் பாகிஸ்தானும் இணைப்பது குறித்து [email protected] என்ற ஈமெயிலுக்கு உங்கள் கருத்துகளை அனுப்புங்கள் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
To all Kashmiris
— Markandey Katju (@mkatju) February 13, 2019
You have been taken for a ride by your politicians and the separatist leaders. pic.twitter.com/ji6annuT4z
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications