மீண்டும் தப்பிய மோடி.. தேர்தல் ஆணைய தீர்ப்பில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம்
பிரதமர் மோடிக்கு எதிராக அளிக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக அளிக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் புகாரில் தேர்தல் ஆணையத்திற்கு எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக 10 க்கும் அதிகமான தேர்தல் விதிமுறை மீறல் புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறை மீறல் செய்ததாக புகார் உள்ளது.

ஆனால் இந்த விதிமீறல் புகார்கள் அனைத்திலும் இவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று வரிசையாக தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் தினமும் மோடிக்கு எதிரான புகார்களை தள்ளுபடி செய்து கொண்டே வருகிறது.
பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது பாலக்கோடு தாக்குதல் குறித்து பேசியது, அபிநந்தன் குறித்து பேசியது, இஸ்லாமியர்கள் குறித்து பேசியது, மைனாரிட்டி என்று தாக்கி பேசியது, ராஜீவ் காந்தியை மோசமாக விமர்சித்து பேசியது ஆகியவை குறித்து புகார்கள் அளிக்கப்பட்டது. அதேபோல் அமித் ஷா கலவரத்தை தூண்டும் வகையில் பேசுகிறார் என்றும் புகார் அளிக்கப்பட்டது.
இப்படி அளிக்கப்பட்ட 10 புகார்களில் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இதனால் காங்கிரஸ் சார்பாக எம்.பி சுஷ்மிதா தேவ் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மோடி, அமித் ஷா மீதான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து தற்போது 9 புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மோடி, அமித் ஷா மீது தவறு எதுவும் இல்லை என்று நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கை குறித்து இரண்டு நாட்கள் முன் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதில், மோடி மற்றும் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்த முடியாது. தேர்தல் ஆணையத்திற்கு எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிற்கு தேர்தல் விதிமீறல் புகாரில் இருந்து நிம்மதி கிடைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications