இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதியா! உடனே 'குடியுரிமை' கொடுத்த கனடா- சேட்டைகள் அம்பலம்!
டெல்லி: இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு தப்பி ஓடி கனடாவில் பதுங்கிய சீக்கிய தீவிரவாதிகளுக்கு அந்நாடு திட்டமிட்டே குடியுரிமை வழங்கி இருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு போராட்டம் 1990களுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் சீக்கியர் தனிநாடு கோரிக்கையை முன்வைப்பவர்கள் இந்தியாவை விட்டு தப்பி ஓடி கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

மேலும் இந்தியாவில் காலிஸ்தான் தனிநாடு எனும் பெயரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு விட்டு போலி பாஸ்போர்ட் மூலம் அல்லது சட்டவிரோதமாக பாகிஸ்தான் வழியாக கனடா செல்வதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் கனடாவின் மக்கள் தொகையில் 2.1% பேர் சீக்கியர்கள். கனடாவில் அரசியலில் வலிமை பெற்று வருகின்றனர் சீக்கியர்கள். இதனால் சீக்கியர்கள் பக்கம் நிற்கிறது கனடா.
இதைவிட இந்தியாவால் தேடப்படுகிற தீவிரவாதிகள் என ஒரு பட்டியல் இன்டர்போல் மூலம் அனுப்பி வைக்கப்படும் போது, அந்த தீவிரவாதிகளுக்கு உடனடியாக குடியுரிமை வழங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறதாம் கனடா. தற்போது இந்தியா- கனடா உறவு முறியக் காரணமான காலிஸ்தான் புலிப்படை தலைவர் நிஜ்ஜார், கனடாவில் அகதியாக பதுங்கி இருந்தார். பின்னர் கனேடிய குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தார். அவரது குடியுரிமை விண்ணப்பம் நிலுவையில் இருந்துள்ளது.
காலிஸ்தான் புலிப்படைத் தலைவர் நிஜ்ஜார், இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1990களின் பிற்பகுதியில் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தலைமறைவானார். பின்னர் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவை விட்டு தப்பி ஓடினார். கனடாவில் இருந்து கொண்டே காலிஸ்தான் புலிப் படை எனும் புதிய தீவிரவாத இயக்கத்தை உருவாக்கினார். அத்துடன் நிற்காமல் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலையாளிகள் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். அவர்களையும் போய் சந்தித்து பேசியிருக்கிறார் நிஜ்ஜார். இத்தகைய பயங்கரவாதி நிஜ்ஜார்தான் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முன்னதாக, இந்தியா தேடுகிறது என இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வந்த உடனேயே, நிஜ்ஜாரின் குடியுரிமை விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு உடனே கனேடிய குடிமகனாக்கப்பட்டுள்ளார். இப்படித்தான் பல சீக்கிய தீவிரவாதிகளை 'கனடா' குடிமகன் என பாதுகாத்து வருகிறது அந்நாடு. இது இந்தியாவுக்கு நீண்டகாலமாக அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த போதும் இருதரப்பு உறவு நலன் கருதி சுட்டிக்காட்ட மட்டுமே செய்தது. தற்போது கனடா ஆக்ரோஷம் காட்ட இந்தியாவும் பதிலடி தந்து வருகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications