18 உயிர்களை பறித்த.. சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடி விபத்து! மேகாலயா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: மேகாலயாவின் கிழக்கு ஜெயின்ஷியா ஹில்ஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தை தீவிரமாக கருதிய மேகாலயா உயர் நீதிமன்றம், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வெடி விபத்து நடைபெற்றபோது சுரங்கத்திற்குள் இருந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து பிடிஐ செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த டிஜிபி ஐ. நோங்ராங், "சரியான எண்ணிக்கையை அறிய முடியவில்லை. மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது" என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நீதிபதிகள் எச்.எஸ். தங்காங் மற்றும் டபிள்யூ. டியேங்டோ அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
தாங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் நடந்த இந்த வெடி விபத்து குறித்த, ஊடகச் செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், கடந்த ஜனவரி 14-ஆம் தேதியும் இதே போன்ற ஒரு விபத்து நடந்தும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவது கவலையளிக்கிறது. இத்தகைய செயல்களைத் தடுக்க அமலாக்க முகமைகள் தவறியது ஏன்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நீதிமன்றம், கிழக்கு ஜெயின்ஷியா ஹில்ஸ் மாவட்ட துணை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுரங்க உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்யவும், அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு முடிந்தவரை உடனடி உதவியும், மருத்துவச் சிகிச்சையும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், பிப்ரவரி 9 அன்று காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராகி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்பதையும் விளக்குமாறும் துணை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications