18 உயிர்களை பறித்த.. சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடி விபத்து! மேகாலயா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: மேகாலயாவின் கிழக்கு ஜெயின்ஷியா ஹில்ஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தை தீவிரமாக கருதிய மேகாலயா உயர் நீதிமன்றம், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வெடி விபத்து நடைபெற்றபோது சுரங்கத்திற்குள் இருந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து பிடிஐ செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த டிஜிபி ஐ. நோங்ராங், "சரியான எண்ணிக்கையை அறிய முடியவில்லை. மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது" என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நீதிபதிகள் எச்.எஸ். தங்காங் மற்றும் டபிள்யூ. டியேங்டோ அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
தாங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் நடந்த இந்த வெடி விபத்து குறித்த, ஊடகச் செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், கடந்த ஜனவரி 14-ஆம் தேதியும் இதே போன்ற ஒரு விபத்து நடந்தும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவது கவலையளிக்கிறது. இத்தகைய செயல்களைத் தடுக்க அமலாக்க முகமைகள் தவறியது ஏன்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நீதிமன்றம், கிழக்கு ஜெயின்ஷியா ஹில்ஸ் மாவட்ட துணை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுரங்க உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்யவும், அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு முடிந்தவரை உடனடி உதவியும், மருத்துவச் சிகிச்சையும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், பிப்ரவரி 9 அன்று காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராகி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்பதையும் விளக்குமாறும் துணை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications