பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி மன்னன் மெகுல் சோக்ஷி டொமினிகாவில் பிடிபட்டது எப்படி?
டெல்லி: பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஷி நேற்று டொமினிகாவில் கைது செய்யப்பட்டார். அவரை விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆன்டிகுவா அரசு தெரிவித்துள்ளது.
நீரவ் மோடியும் மெகுல் சோக்ஷியும் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றுக் கொண்டு கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டனர்.
வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணையை மேற்கொண்டது. நீரவ் மோடி லண்டனில் வழக்கு விசாரணையை எதிர் கொண்டு வருகிறார்.

கரீபியன் தீவு
அதே நேரம் மெகுல் சோக்ஷி கரீபியன் தீவுகளில் ஒன்றான ஆண்டிகுவா நாட்டில் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த நாட்டில் 2018ஆம் ஆண்டு அவர் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார்.

நாடு கடத்தல்
தேடப்படும் நபர்களை நாடு கடத்தல் தொடர்பாக இந்தியா மேற்கொண்ட நாடுகளின் ஒப்பந்த பட்டியலில் ஆண்டிகுவா இல்லை. எனினும் அவரை நாடு கடத்துதல் தொடர்பான முயற்சிகளில் இந்திய விசாரணை முகமைகள் ஈடுபட்டுள்ளன.

பர்புடா
மெகுல் சோக்ஷிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸும் இண்டர்போல் விடுத்தது. இந்த நிலையில் ஆண்டிகுவாவில் இருந்த சோக்ஷி திடீரென அங்கிருந்து மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் இவர் பர்புடாவில் இருப்பதாக தகவல் வந்த நிலையில் அங்கும் அவரை காணவில்லை.

மெகுல் சோக்ஷி
இந்த நிலையில் டொமினிகா தீவில் இருந்த சோக்ஷி நேற்று அதிரடியாக இன்டர்போல் போலீஸால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து இன்டர்போல் போலீஸார் கூறுகையில் மெகுல் சோக்ஷி சுற்றி வளைக்கப்பட்டு டொமினிகாவில் கைது செய்யப்பட்டார்.

இந்தியா
அவர் ஆன்டிகுவா மற்றும் பர்புடாவிலிருந்து படகு மூலம் தப்பி டொமினிகா வந்துள்ளது தெரியவந்தது என்றனர். இந்தியாவுக்கு நாடு கடத்தல் மற்றும் அவரது குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில் இரு பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தார்.

கைது
அவர் ஆண்டிகுவா வீட்டில் காணவில்லை என அவரது வீட்டு பணியாளர் தகவல் சொன்னார். இதையடுத்து அவர் மாயமானது குறித்து ஆன்டிகுவா மற்றும் பர்புடா போலீஸார் இன்டர்போலுக்கு தகவல் தெரிவித்தனர். அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் அவர் டொமினிகாவில் கைது செய்யப்பட்டார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications