"கவனம்.. இதுதான் முக்கியம்".. மோடியுடன் 4 பாஜக எம்எல்ஏக்கள் மீட்.. மேலிடம் அனுப்பிய சிறப்பு மெசேஜ்?
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாட்டை சேர்ந்த 4 பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்த நிலையில், தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஏக குஷியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 4 இடங்களில் வென்று, சட்டசபைக்கு சென்றாலும் கூட, பாஜகவினர் இடையே கடந்த சில நாட்களாக பெரிய மகிழ்ச்சி காணப்படவில்லை. காரணம் கட்சிக்குள் நிலவிய கடுமையாக கோஷ்டி மோதல்.
பெரிதாக வெளியே தெரியாமல் இருந்த கோஷ்டி கடந்த சில நாட்களாக பட்டவர்த்தமான சர்ச்சையாகும் நிலைக்கு சென்றது. முக்கியமாக வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்த விவாதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

எச். ராஜா
காரைக்குடியில் தேர்தல் செலவிற்கு கொடுத்த பணத்தை எச். ராஜா அபகரித்துவிட்டார். 4 கோடி ரூபாயில் வீடு கட்டுகிறார். தேர்தல் செலவு நிதியை சொந்த செலவிற்கு பயன்படுத்துகிறார் என்று எச். ராஜா மீது காரைக்குடி நிர்வாகிகள் புகார் வைத்தனர். இதனால் காரைக்குடி பாஜக நிர்வாகிகள் பலர் கூண்டோடு வெளியேறினார்கள். இந்த நிலையில் இந்த விவகாரம் பாஜக தேசிய தலைமை வரை சென்றது.

வெளியேற்றம்
தமிழ்நாடு பாஜகவில் நடக்கும் பூசல் குறித்தும், தேர்தல் செலவினம் குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இன்னொரு பக்கம் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் இதை பற்றி கண்டிப்பாக விசாரிப்பேன். எச். ராஜாவாக இருந்தாலும் கண்டிப்பாக அவர் மீதான புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று குறிப்பிட்டார். இதன் பின் எச். ராஜாவிற்கு எதிராக புகார் வைத்த சந்திரன் என்ற நிர்வாகி உட்பட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

மோதல்
சந்திரன் நீக்கம், எச். ராஜா மீதான புகார், எல்.முருகன் பேட்டி என்று தமிழ்நாடு பாஜகவில் கடந்த சில நாட்களாக கசப்பான சம்பவங்கள் நடந்தன. இந்த நிலையில்தான் டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்து பேசினார். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர். காந்தி மற்றும் சி.கே. சரஸ்வதி ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்தார்.

சந்தோசம்
தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் இந்த சந்திப்பில் உடன் இருந்தார். இந்த சந்திப்பில் தமிழ்நாடு பாஜகவின் செயல்பாடுகளை பிரதமர் மோடி பாராட்டியதாகவே கூறப்படுகிறது. சட்டசபையில் பாஜக நன்றாக நடந்து கொண்டது. முதல் கூட்டத்தொடரில் நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டனர். இதேபோல் பட்ஜெட் கூட்டத்தொடரில் செயல்பட வேண்டும். வேக்சின் குறித்து கேள்வி எழுப்புங்கள்.

தொகுதி
உங்கள் தொகுதிக்கு வேக்சின் வரவில்லை என்றால், வேக்சின் வேஸ்ட் அதிகம் இருந்தால் அதை பற்றி கேள்வி எழுப்புங்கள் என்று பிரதமர் மோடி எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். மொத்தத்தில் இந்த மீட்டிங் பாசிட்டிவ்வாக இருந்ததாகவே பாஜகவினர் கூறுகிறார்கள். ஆனால் அதே சமயம் தமிழ்நாடு பாஜகவில் இனி கோஷ்டி மோதல் இருக்க கூடாது.

அறிவுரை
நிர்வாகிகளுக்கு இடையிலான மோதலை வெளியே பொதுவில் பேச கூடாது என்றும் அறிவுரை வழங்கப்பட்டதாக தெரிகிறது. மோடியுடன் நடந்த மீட்டிங்கிற்கு பின் டெல்லி பாஜக மேலிடம் இந்த அறிவுரையை வழங்கியதாக கூறப்படுகிறது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நிர்வாகிகள் மோதல் இன்றி இருப்பதே முக்கியம்.

வேறுபாடு
கருத்து வேறுபாடு, புகார் இருந்தால் கட்சி கூட்டத்தில் பேசுங்கள், மீடியாவிடம் பேச வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒற்றுமைதான் முக்கியம் என்று மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. அதே சமயம் எந்த நிர்வாகி மீது தேசிய தலைமை தனிப்பட்ட வகையில் கோபத்தில், வருத்தத்தில் இல்லை என்றும் கூறுகிறார்கள். இதனால் தமிழ்நாடு பாஜகவில் பெரிய அளவில் ஆக்சன்கள் எதுவும் எடுக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications