ஜேபி நட்டா மீதான தாக்குதல் எதிரொலி: மே.வங்க தலைமை செயலாளர், டிஜிபிக்கு மத்திய அரசு சம்மன்
டெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மீதான தாக்குதலைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு டிசம்பர் 14-ல் ஆஜராக வேண்டும் என்று மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஜேபி நட்டா 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது ஜேபி நட்டாவின் பாதுகாப்பு வாகனம் தாக்குதலுக்குள்ளானது.

ஜேபி நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது சராமரியாக கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த சம்பவத்துக்கு மத்திய அமைச்சர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் இது தொடர்பாக டிசம்பர் 14-ல் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அம்மாநில டிஜிபி வீரேந்திரா, தலைமை செயலாளர் ஆலபன் பந்தோபாத்யா ஆகியோருக்கு உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். இந்த அறிக்கை அனுப்பிய சில மணிநேரங்களிலேயே மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications