Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணத்தை பறிக்கும் சட்டவிரோத கடன் செயலிகள்.. பயனர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சட்ட விரோத கடன் செயலிகள் புதுப்புது யுக்திகளை கையாண்டு, பயனர்களின் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், கடன் செயலிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் பற்றி விளக்கியுள்ள உள்துறை அமைச்சகம், பயனர்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கியுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோத டிஜிட்டல் கடன் செயலிகளின் மோசடிகள் அதிகரித்து வருவதைத் தடுக்க, மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் பயனர்கள் இச்செயலிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை தனிப்பட்ட தகவல்களை அணுகி, பணம் செலுத்த அச்சுறுத்துகின்றன. மத்திய அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்சகம் இணைந்து, சீன நாட்டவர் சம்பந்தப்பட்ட ரூ.750 கோடி கடன் செயலி மோசடியை எதிர்த்து போராடுகின்றன.

mha-warns-of-increasing-harassment-linked-to-illegal-digital-loan-apps

சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகள்

சமீபத்தில், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69ஏ இன் கீழ், 87 சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகள் தகுந்த நடைமுறைகளுக்குப் பிறகு தடுக்கப்பட்டதாக அரசு நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தது. MeitY இணைய மோசடிகளைத் தடுப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. பயனர்களைச் சென்றடைவதற்கு முன்பே தீங்கிழைக்கும் செயலிகளை நிறுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

2025-இல் ரூ.750 கோடி போலி கடன் செயலி மோசடி வலையமைப்பின் மூளையாகக் கருதப்படும் பட்டயக் கணக்காளர் அபிஷேக் அகர்வால் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவரது கைது மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. Inst Loan, Maxi Loan, RupeeGo போன்ற செயலிகள் மூலம் செயல்பட்ட சீன நாட்டவர் தொடர்புடைய இந்தக் கும்பல், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தரவுகளைத் திருடி, மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் சமூகத்தில் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில், அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி பணம் பறித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

மோசடிக்கு ஆளானவர்களில், லூதியானாவைச் சேர்ந்த துணை அஞ்சல் அலுவலக அதிகாரியான சரப்ஜித் சிங் ஒருவர் ஆவார். இவர் 2024 டிசம்பரில், ₹2 லட்சம் கடனுக்கு Flipkart மூலம் விண்ணப்பித்தபோது, போலி KYC இணைப்பால் ₹87,000 இழந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், பெங்களூரில் Score Climb செயலி பதிவிறக்கம் செய்த ஒரு பெண், கடன் விண்ணப்பிக்காமலேயே அவரது தரவுகள் திருடப்பட்டது. அதோடு அவரிடம் மிரட்டி பணமும் பறிக்கப்பட்டது.

நாடு தழுவிய போலீஸ் சைபர் பிரிவுகள், Prime Lend, Candy Cash போன்ற அதிக ஆபத்துள்ள செயலிகளைப் பற்றி தொடர்ந்து எச்சரிக்கின்றன. அசல் கடன் இல்லாதபோதிலும், பணம் செலுத்த தாமதப்படுத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அவதூறான அழைப்புகள் மற்றும் மிரட்டல்களை எதிர்கொள்கின்றனர். உள்துறை அமைச்சக மாநில சைபர் செல்களை விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்த ஊக்குவித்துள்ளது.

2,200-க்கும் மேற்பட்ட போலி செயலிகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே மிகச் சிறந்த பாதுகாப்பு. பயனர்கள் அதிகாரபூர்வ ஆப் ஸ்டோர்கள் அல்லது சரிபார்க்கப்பட்ட வங்கி இணையதளங்களிலிருந்தே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து மட்டுமே கடன் வசதிகளைப் பெற வேண்டும். எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் வழியாக வரும் KYC இணைப்புகளை கிளிக் செய்யவோ OTPகள் பகிரவோ கூடாது.

டிஜிட்டல் கடன் மோசடியின் தீவிரத்தை உணர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்துறை அமைச்சகம், ஆர்.பி.ஐ மற்றும் MeitY ஆகியவை தங்கள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தியுள்ளன. 2024-இல் கூகுளுக்கு வந்த உத்தரவால் 2,200-க்கும் மேற்பட்ட போலி செயலிகள் நீக்கப்பட்டன; ஏப்ரல் 2021 முதல் ஆகஸ்ட் 2023 வரை சுமார் 4,700 செயலிகள் நீக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் டிஜிட்டல் சந்தையை க்ளீன் செய்யும் ஒரு முக்கிய முயற்சியாகும்.

உடனே புகார் அளிக்க வேண்டும்

மோசடி செயலிகள் பெரும்பாலும் தொடர்புகள்(காண்டாக்ட்ஸ்) மற்றும் கேலரிகளை அணுக அனுமதி கேட்கும். பரிவர்த்தனைகளுக்கு இரு-காரணி அங்கீகாரம் (two-factor authentication) மற்றும் எஸ்.எம்.எஸ் எச்சரிக்கைகளைச் செயல்படுத்தவும். மிரட்டப்பட்டாலோ பணம் கேட்டு மிரட்டப்பட்டாலோ அந்த எண்களைத் தடுத்து ஆதாரங்களைப் பாதுகாத்து உடனடியாக புகாரளிக்கவும்.

சட்டவிரோத செயலிகளைத் தடுப்பது மற்றும் ஆயிரக்கணக்கான மோசடி செயலிகளை நீக்குவதற்கு இந்தியாவின் சைபர் பாதுகாப்பு எந்திரம் மிகவும் செயலில் உள்ளதாகவும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருப்பதைக் காட்டுகின்றன. தொழில்நுட்ப தலையீடு ஒழுங்குமுறை மேற்பார்வை பொது விழிப்புணர்வு ஆகியவற்றை இணைத்த அரசின் அணுகுமுறை பல மோசடிகளைத் தடுத்துள்ளது. தொடர்ந்த் மோசடிகளில் மக்கள் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க உள்துறை அமைச்சகம் தொடர்ந்து முயற்சி செய்யும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+