ஏப்ரல் 20 முதல் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் திறக்க அனுமதி.. ஆனால் எல்லா இடங்களிலும் அல்ல!
டெல்லி: ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவின் போது மளிகைக் கடைகள், பால் கடைகள், காய்கறி கடைகள், பழக் கடைகள், இறைச்சிக் கடைகள் திறந்திருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே வேளையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா பரவல் எதிரொலியாக நேற்றுடன் முடியவிருந்த லாக்டவுன் தற்போது மே 3 -ஆம் தேதி வரை தொடர்கிறது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிடும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாடிய போது கூறியிருந்தார்.

அதன்படி தற்போது மத்திய அரசு அதுகுறித்து வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்து வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20 இல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பின்னர் விவசாயம், தோட்டக் கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி. ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.
ஏப்ரல் 20 முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். ஆனால் முகக் கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறார்கள். அது போல் கனரக வாகன பழுது பார்ப்பு கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. நெடுஞ்சாலையோர ஓட்டல்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ 500 அபராதம் வசூலிக்கலாம் என தெரிவித்துள்ளது. அது போல் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவின் போது மளிகைக் கடைகள், பழக் கடைகள், பால் கடைகள், காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள் திறந்திருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதே வேளையில் எல்லா இடங்களிலும் இந்த கடைகள் திறந்திருக்காது என்பதை உணர்த்தும் வகையில் மத்திய அரசு ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. அதாவது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது என்பதுதான். எனவே கொரோனா அதிகம் பாதித்த ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு டோர் டெலிவரி செய்யப்படும் என்றே தெரிகிறது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications