என்னாது.. 2 தடுப்பூசிகளையும் கலந்து.. ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாமா.. ஹூ சொல்வது என்ன?

2 தடுப்பூசிகளை சேர்த்து ஒன்றாக போடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2 தடுப்பூசிகள் ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாம் என்ற கருத்துக்கள் தற்போது எழுந்து வருகிறது.. ஆனால், இது ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உரிய விளக்கமும் தந்துள்ளது.

கொரோனா வைரஸ் என்பது என்ன என்ற ஆய்வுகள் ஒருபக்கம் தொடர்ந்து நடந்து வருகின்றன.. மற்றொரு பக்கம், அதற்குரிய மருந்துகள், சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இப்போதைக்கு ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே.. அதனால் உலக நாடுகளும், தடுப்பூசிகளை தங்கள் மக்களுக்கு செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

தடுப்பூசி

தடுப்பூசி

இந்நிலையில், அந்த தடுப்பூசிகள் குறித்த செய்திகளும் தினம் தினம் வெளியாகி கொண்டிருக்கின்றன.. தாய்லாந்து போன்ற ஒருசில நாடுகளில் 2 தடுப்பூசிகளை அதாவது வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதையடுத்து, 2 ஊசிகளை கலந்து ஒன்றாகவே போட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் உருவாகி கொண்டிருக்கிறது.. ஆனால், இது சரியானதல்ல என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்..

விளக்கம்

விளக்கம்

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் இதை பற்றி சொல்லும்போது, "கொரோனாவுக்காக 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று சொல்வது சரியான நடவடிக்கை கிடையாது.. ஏனென்றால், உலக சுகாதார நிறுவனமே இன்னும் அது பற்றி ஒரு முடிவுக்கு வரவில்லை. .. இப்போதைக்கு குழப்பமான நிலைமைதான் உள்ளது..

சிபாரிசு

சிபாரிசு

இப்படிப்பட்ட சூழலில், 2 வேறு வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று சொல்வதும், அதற்கு சிபாரிசு செய்வதும் ஆபத்தைதான் ஏற்படுத்தும். இதற்கு உரிய தரவுகள், ஆய்வுகள் செய்தபிறகே, 2 ஊசிகளை பயன்படுத்துவது பற்றி யோசிக்க வேண்டும்" என்றார்.

 கோரிக்கை

கோரிக்கை

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனரும் டெட்ராஸ் அதனம் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.. அதில், ஒரு கோரிக்கையையும் விடுத்துள்ளார்.. அதில், "3-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது கிடையாது.. ஆனால், அதுக்கு பதிலாக பணக்கார நாடுகள் தங்களிடம் மிச்சம் உள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.

 வேண்டுகோள்

வேண்டுகோள்

ஏனென்றால், கொரோனா உயிரிழப்புகள் இந்த 10 வாரங்களாக உலகளவில் குறைந்து காணப்படுகிறது..ஆனால், டெல்டா வகை தொற்றுகளால் உயிரிழப்பு மறுபடியும் அதிகமாகி விட்டதால், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் ஐநாவின் கோவேக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+