"மோடி அரசு மிடில் கிளாஸ் மக்கள் முதுகில் குத்திவிட்டது.." லிஸ்ட் போட்டு சாடிய ராகுல் காந்தி
டெல்லி: லோக்சபாவில் இப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது பேசிய ராகுல் காந்தி மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கல்வித் துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், மத்திய அரசு மிடில் கிளாஸ் மக்களின் முதுகில் குத்திவிட்டதாகச் சாடினார்.
நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 23ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் ராகுல் காந்தி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கெடுத்துப் பேசினார்.
அப்போது ராகுல் காந்தி மத்திய அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். நாடு முழுவதும் வினாத்தாள்கள் கசிந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இது குறித்து மத்திய பட்ஜெட்டில் எந்தவொரு தகவலும் இல்லை என்று விமர்சித்தார். பட்ஜெட்டில் கல்வித்துறைக்குக் குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்ற அவர், அக்னிவீர் திட்டத்திற்கான ஓய்வூதியம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்றும் அவர் சாடினார்.
மேலும், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையால் நாட்டின் தொழில்துறை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் வரி தீவிரவாதத்தால் இந்திய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "கொரோனா சமயத்தில் தட்டுகளைத் தட்டவும், மொபைல் போன் டார்ச்களை அடிக்கவும் சொன்னார் மோடி. அதை எல்லாம் செய்த மிடில் கிளாஸ் மக்களின் முதுகிலும் மார்பிலும் மோடி அரசு குத்திவிட்டது" என்றார்.
ரயில்வே மற்றும் விமான போக்குவரத்துத் துறைகளின் ஒப்பந்தங்கள் இரு பெரும் தொழிலதிபர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். ராகுல் காந்தி அதானி, அம்பானி பெயர்களைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி பேச எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, அவையின் மாண்பை ராகுல் காந்தி சீர்குலைக்க முயல்வதாகவும் சபாநாயகருக்கே சவால் விடுப்பதாகவும் சாடினார். இரு தரப்பும் மாறி மாறி விமர்சித்து வரும் நிலையில், அவையில் ஒரு குழப்பமான சூழலே நிலவி வருகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications