அனில் அம்பானிக்கு உதவுவது போல மக்களுக்கும் உதவுங்கள் மோடி.. ராகுல் காந்தி பரபரப்பு விமர்சனம்!
அனில் அம்பானிக்கு உதவுவது போல மக்களுக்கும் பிரதமர் மோடி உதவ வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி: அனில் அம்பானிக்கு உதவுவது போல மக்களுக்கும் பிரதமர் மோடி உதவ வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐந்து மாநில தேர்தல் வெற்றிக்கு பின் மிகவும் தீவிரமாக அரசியலில் ஈடுப்பட்டு வருகிறார். நாடாளுமன்றம், பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் இவர் பேசுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திடீரென்று அடித்து ஆட தொடங்கி இருக்கும் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை தொடர்ந்து தாக்கி பேசி வருகிறது. நேற்று பிரதமர் மோடி குறித்து ராகுல் நிறைய குற்றச்சாட்டுகளை அடிக்கினார்.

ராகுல் காந்தி பேட்டி
நேற்று பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் என்று மொத்த நாட்டையும் பாழாக்கிவிட்டார். காங்கிரஸ் லோன் தள்ளுபடி செய்வதை அவர் கிண்டல் செய்கிறார். ஆனால் அவரின் குஜராத் மாநிலத்தில்தான் விவசாயிகள் லோன் தள்ளுபடி கேட்டு போராடி வருகிறார்கள். இது அவருக்கு தெரியுமா என்று கூற தெரியவில்லை.

வேலைவாய்ப்பு
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு வேலை போய் இருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி அதை பற்றி பேசுவதே இல்லை. 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக வாக்குறுதி அளித்த மோடி, இப்போது இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறித்து இருக்கிறார்.

அம்பானி
பிரதமர் மோடி அனில் அம்பானிக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார். அனில் அம்பானிக்கு உதவுவது போல மக்களுக்கும் பிரதமர் மோடி உதவ வேண்டும். மோடி மக்கள் மீது எப்போதுதான் கவனம் செலுத்துவார். அவர் இப்படியே இருந்தால் இளைஞர்களின் எதிர்காலம் மோசமாகிவிடும்.

காங்கிரஸ் என்ன செய்தது
காங்கிரஸ் கட்சி இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபட்டது. ஆனால் மோடி டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி மூலம் இந்தியாவின் வளர்ச்சியை பாழாக்கினார். அவர் யார் பேச்சையும் கேட்காத, எதற்கும் தகுதி இல்லாத நபர், என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications