பாதுகாப்பு அதிகாரி உடனில்லை... போக்குவரத்து நிறுத்தமில்லை ... குருத்வாராவில் மோடி திடீர் தரிசனம்!

Subscribe to Oneindia Tamil

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் உள்ள ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவிற்கு நேற்று திடீரென சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் உடன் செல்லவில்லை எனவும், போக்குவரத்தும் தடை விதிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.

வேளாண் சட்டங்களை கண்டித்து 25-வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி குருத்வாராவில் தரிசனம் செய்துள்ளார்.

 Modi surprise visit to Delhi gurudwara

பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் உள்ள ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவிற்கு நேற்று திடீரென சென்றார். அங்கு தரிசனம் செய்த அவர் குரு தேஜ் பகதூருக்கு அஞ்சலியும் செலுத்தினார்.வழக்கமாக பிரதமர் மோடி எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கபடும். பாதுகாப்பு அதிகாரிகள் உடன் செல்வார்கள். அந்த பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்படும்.

 Modi surprise visit to Delhi gurudwara

ஆனால் பிரதமர் மோடி நேற்று குருத்வாராவிற்கு சென்றபோது, எந்த பாதுகாப்பு அதிகாரியும் உடன் செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும், அந்த பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்படவில்லை என்றும் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை எனவும் அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 Modi surprise visit to Delhi gurudwara

குருத்வாராவில் தரிசனம் செய்தது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:- இன்று காலை, ஸ்ரீகுரு தேஜ் பகதூர்ஜி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள, வரலாற்று சிறப்பு மிக்க ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவில் தரிசனம் செய்தேன். மிகவும் பாக்கியவானாக, ஆசிர்வதிக்கப்பட்டவன் போல் உணர்கிறேன்.

ஸ்ரீகுரு தேஜகபகதூரின் அன்பில் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களின் நானும் ஒருவன். ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் கொள்கைகளை கொண்டாடுவோம் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த பதிவுடன் குருத்வாராவில் தரிசனம் செய்த போட்டோக்களையும் பிரதமர் மோடி இணைத்து இருந்தார்.

 Modi surprise visit to Delhi gurudwara

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பிரதமர் மோடி நேரடியாக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கூறியுள்ள நிலையில் பிரதமர் மோடி குருத்வாராவில் தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+