ஒடிஷா புயல் பாதிப்பு.. உடனே கிளம்பிச் செல்கிறார் பிரதமர் மோடி!
Recommended Video
டெல்லி: கஜா புயலால் காவிரி டெல்டா பகுதி சீர்குலைந்து பரிதவித்து நின்றபோது பார்வையிட வராத பிரதமர் நரேந்திர மோடி, தற்போது ஒடிஷா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட உடனடியாக கிளம்பிச் செல்கிறார்.
ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களில் ஃபனி புயல் கடும் சீரழிவை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பெரிய பொருட் சேதத்தை ஃபனி புயல் ஏற்படுத்தியுள்ளது. அதி தீவிர புயலாக அது ஒடிஷாவை தாக்கியதால் சேதமும் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் ஒடிஷா மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்தோடு நில்லாமல் அவர் நேரடியாக ஒடிஷா மாநிலத்திற்கு வருகிற திங்கள்கிழமை புறப்பட்டுச் செல்கிறார். புயல் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிடவுள்ளார். இதை அவரே டிவீட் மூலம் கூறியுள்ளார்.
|
ஒடிஷா செல்கிறார் மோடி
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், 6ம் தேதி காலை நான் ஒடிஷா செல்கிறேன். அங்கு ஃபனி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

கஜாவுக்கு வரலை
தமிழகத்தில் ஒக்கி, கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டபோது மத்திய, மாநில அரசுகள் மக்களின் கடும் கோபத்தை சந்தித்தன. காரணம், இரு அரசுகளும் தேவையான உதவிகளைச் செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. அதேபோல வர்தா உள்ளிட்ட முந்தைய புயல்களின் இழப்பு இதுவரை நேர் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
|
பரிதாபத்துக்குரிய காவிரி டெல்டா
கஜா புயல் காவிரி டெல்டாவைத் தாக்கியபோது பிரதமர் மோடி நேரில் வரவில்லை. ஆய்வு செய்யவில்லை. ஹெலிகாப்டரில் கூட வந்து பார்க்கவில்லை. இந்த வருத்தம், ஏமாற்றம், ஆதங்கம், கோபம் இன்னும் காவிரி டெல்டா மக்களிடம் உள்ளது.

நல்லது நடக்கட்டும்
இந்த நிலையில் ஒடிஷாவில் ஃபனி புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி உடனடியாக செல்வது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. இந்த மக்களுக்காவது மத்திய அரசு விரைந்து நிவாரணம் வழங்கினால் மகிழ்ச்சிதான்.
-
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications