பாஜக-ஜேடியூ கூட்டணியை மொத்தமாக கைவிட்ட யாதவர்கள்- முஸ்லீம்கள்.. சாணக்யா எக்ஸிட் போல்
டெல்லி: பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் உள்ளிட்டவை அடங்கிய எதிர்க்கட்சி கூட்டணி, யாதவர்கள் மற்றும் முஸ்லிம்கள் வாக்குகளை அதிகளவில் பெற்றுள்ளதாக டுடேஸ் சாணக்கியா எக்ஸிட் போல் சர்வே தெரிவிக்கிறது.
Recommended Video
பீகாரில் மூன்று கட்ட தேர்தல்கள் முடிவடைந்து விட்ட நிலையில், டுடேஸ் சாணக்கியா தனது கருத்துக் கணிப்பில், 191 சீட்டுகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணிக்கு செல்லப்போவதாக அதிரடியாக தெரிவித்துள்ளது.

மற்ற எக்ஸிட் போல் முடிவுகளை விட இதில் மிகப் பெரும்பான்மையான வாக்குகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பக்கம் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாதி ரீதியாக எடுத்துக்கொண்டு பார்த்தால், பட்டியல் இனத்தில் உள்ள வாக்காளர்களில் 34% பேர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணிக்கு ஓட்டு போட்டு உள்ளதாகவும், 39 சதவீதம் பேர் பாஜக கூட்டணிக்கு ஓட்டு போட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
யாதவ் ஜாதியினரை தவிர பிற பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் 56% பேர் பாஜக கூட்டணிக்கும், 30 சதவீதம் பேர் ராஷ்ட்ரிய ஜனதா தளம்- காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யாதவர் வாக்குகளில் 69 விழுக்காடு ராஷ்ட்ரிய ஜனதா தளம்- காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணிக்கு சென்றுள்ளது. பாஜக கூட்டணிக்கு 22 சதவீதம் பேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பீகாரில் உள்ள ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 16% பேர் யாதவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
உயர்ஜாதி பிரிவில் இருக்கக்கூடியவர்களில் 60 சதவீதம் பேர், பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். முஸ்லீம்களில் 80% பேர் ராஷ்ட்ரிய ஜனதா தளம்- காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். பீகார் மக்கள் தொகையில் 17% பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக பாஜகவுக்கு செல்லும் முற்பட்ட வகுப்பினரின் வாக்குகள் பிளவுபட்டு ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணிக்கு சென்றுள்ளன என்பதை இந்த கருத்துக் கணிப்பு எடுத்துக் காட்டுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் யாதவர்களின் வாக்குளில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக பாஜக இழந்துள்ளது என்பதையும் இந்த சர்வே தெரிவிக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications