இந்திய நிலப்பரப்பை சீனாவிற்கு யார் கொடுத்தது.. உங்கள் தாத்தாவை கேளுங்கள்.. ராகுலுக்கு பதிலடி
டெல்லி: இந்தியா-சீனா பிரச்சினை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று பேசியதற்கு பதிலடி கொடுத்த உள்துறை இணையமைச்சர் ஜி. கிசான் ரெட்டி "இந்தியாவின் நிலப்பரப்பை சீனாவுக்குக் கொடுத்தது யார் என்று ராகுல் தனது தாத்தாவிடம் (ஜவஹர்லால் நேரு) தான் கேட்க வேண்டும், அவருக்கு பதில் கிடைக்கும் ... யார் ஒரு தேசபக்தர், யார் இல்லை, பொதுமக்கள் அனைத்தையும் அறிவார்கள்" என்று கூறினார்.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்தியா தனது நாட்டின் எல்லையில் ஒரு அங்குலத்தை கூட யாரையும் தொட அனுமதிக்காது. படைகள் விலக்கப்பட்டு வருகின்றன என்று சீன பிரச்சனையை பற்றி விரிவாக பேசினார் .
இதனை விமர்சித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பேசுகையில். காஷ்மீரின் கிழக்கு லடாக் எல்லையில் என்ன நிலைமை என்பது தொடர்பாக நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை வெளியிட்டார். இப்போது, நமது படைகள் பிங்கர்-3 மலைப்பகுதிக்கு செல்வதாக அவர் கூறினார்.

பிரதமர் மோடி
பிங்கர்-4 பகுதி நமது பிராந்தியம். இப்போது, அந்த பிங்கர்-4 பகுதியில் இருந்து பிங்கர்-3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளன. நமது பிராந்தியத்தை பிரதமர் மோடி ஏன் சீனாவுக்கு விட்டுக்கொடுத்தார்?

உண்மை என்ன
சீனா நுழைந்த இடத்திலிருந்து மிக முக்கியமான பகுதியான டெப்சாங் சமவெளி பற்றி பாதுகாப்பு அமைச்சர் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உண்மை என்னவென்றால், பிரதமர் இந்தியப் பகுதியை சீனாவுக்குக் கொடுத்திருக்கிறார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.

ராகுல் விமர்சனம்
பிரதமர் ஒரு கோழை, அவரால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது. அவர் நமது ராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார். ராணுவத்தின் தியாகத்திற்கு துரோகம் செய்கிறார். இவ்வாறு செய்வதை இந்தியாவில் உள்ள யாரும் அனுமதிக்கக்கூடாது." இவ்வாறு ராகுல் காந்தி கடுமையாக பேசினார்.

அமைச்சர் பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்துள்ள உள்துறை இணையமைச்சர் ஜி. கிசான் ரெட்டி "இந்தியாவின் நிலப்பரப்பை சீனாவுக்குக் கொடுத்தது யார் என்று ராகுல் தனது தாத்தாவிடம் (ஜவஹர்லால் நேரு) தான் கேட்க வேண்டும், அவருக்கு பதில் கிடைக்கும் ... யார் ஒரு தேசபக்தர், யார் இல்லை, பொதுமக்கள் அனைத்தையும் அறிவார்கள்.

இந்தியா பதிலடி
இந்தியாவை யார் தாக்கினாலும அதற்கு எதிராக நாங்கள் வலுவாக போராடி பதிலடி கொடுப்போம். உலகம் அதைக் கண்டுள்ளது. நம் நாட்டை சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கில் உள்ள (பாகிஸ்தான், சீனா) நாடுகளுக்கும் எங்கள் அரசாங்கம் காட்டியுள்ளது.ராகுல் காந்தியின் கருத்து மற்றும் நாடாளுமன்றத்தில் அவரது பேச்சு ஆகியவை அவரது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. ராகுல் காந்தி எதையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை" என்றார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications