ஒரு வழியாக மவுனம் கலைத்தார் ஜெனரல் நரவனே.. புத்தக சர்ச்சை குறித்து கொடுத்த மிக முக்கிய விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நரவனே புத்தகம் குறித்து இப்போது தேசியளவில் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இதில் அவரே மவுனம் கலைத்துள்ளார். சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியாகவில்லை எனப் பென்குயின் பதிப்பகம் விளக்கம் கொடுத்திருந்த சூழலில், அதைப் பகிர்ந்து "இதுவே புத்தகத்தின் நிலை" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேவின் "ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி" (Four Stars of Destiny) புத்தகம் குறித்தே இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. அந்தப் புத்தகத்தில் இருக்கும் சில பகுதிகளை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குறிப்பிட முயன்றார். இருப்பினும், அது வெளியாகாத புத்தகம் என்பதால் அது பற்றிப் பேசக்கூடாது எனச் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Naravane Book Status Ex army chief conforms Penguin house statement that the book has not released

நாடாளுமன்றத்தில் இதை மையமாக வைத்துத் தொடர்ந்து அமளி நடந்து வருகிறது. இந்த புத்தகம் ஏற்கனவே வெளியாகிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். ஆனால், அதை மறுத்த பென்குயின் பதிப்பகம், இந்த புத்தகம் வெளியிடப்படவில்லை என விளக்கம் கொடுத்திருந்தது.

இது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நரவனே மவுனம் கலைத்துள்ளார். பெங்குயின் பதிப்பகத்தின் விளக்கத்தைப் பகிர்ந்த ஜெனரல் (ஓய்வுபெற்ற) நரவனே, "நிலைமை இதுதான்" என்று தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது அந்தப் புத்தகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும், அங்கீகரிக்கப்பட்ட பிரதிகள் எதுவும் புழக்கத்தில் இல்லை என்றும் பதிப்பகம் தெரிவித்ததை நரவனே முழுமையாக உறுதிப்படுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+