கம்யூனிஸ்டுகளை உண்டியல் குலுக்குவதாக கிண்டல் செய்த பாஜக நிலையை பாருங்க!
Recommended Video

டெல்லி: 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜகவுக்கு பிரதமர் நரேந்திர மோடி 1000 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
2019ம் ஆண்டில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிதி திரட்டுகிறது. ஆனால், இம்முறை மக்களிடமிருந்தே பணம் கேட்கிறது பாஜக.

தொழிலதிபர்களிடமிருந்துதான் கட்சிகள் நன்கொடை பெறுகின்றன, பிறகு அதே தொழிலதிபர்கள் நலனுக்காக ஆட்சி நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன என்ற விமர்சனங்களை தவிர்க்க கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்களிடம் உண்டியலில் நன்கொடை பெறுவது வழக்கம்.
இதை பார்த்து பாஜகவில் சில பிரச்சார பீரங்கிகள், கம்யூனிஸ்ட்டுகளை உண்டியல் குலுக்கும் கட்சி என்று கேலி செய்து பேசியுள்ளனர். ஆனால், இப்போது பாஜக டிஜிட்டல் வடிவத்தில் மக்களிடம் பணம் கேட்கிறது என்று கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.
You can contribute any amount from Rs. 5/- to Rs. 1000/- via the ‘Narendra Modi Mobile App.’
— Narendra Modi (@narendramodi) October 23, 2018
Your support and contribution will strengthen the resolve of our Karyakartas to serve the nation. https://t.co/DLjNCtBzvg
தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி திரட்டும் நடவடிக்கையாக பிரதமர் மோடி, மொபைல் ஆப் வழியாக ரூ.1000 நன்கொடையாக அளித்துள்ளார். 'நரேந்திர மோடி மொபைல் ஆப்' மூலம் 5 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை கட்சிக்கு நன்கொடை அளிக்குமாறு மோடி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். http://donations.narendramodi.in/ என்ற வெப்சைட் முகவரியையும் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications