நாடு முழுக்க 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.. நிதி அமைச்சர் நிர்மலா அறிவிப்பு!
நாடு முழுக்க 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: நாடு முழுக்க 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்பதற்காக 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார். இதையடுத்து இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார். மூன்றாவது நாளாக இன்று பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், நாடு முழுக்க கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த அனைத்து விதமான கால்நடைகளுக்கும் 100% தடுப்பு மருந்து இடப்படும். இதற்கான பெரிய அளவில் மருத்துவ குழு களமிறக்கப்படும். பிரதமர் மோடி இதில் நேரடியாக ஆர்வம் செலுத்தி உள்ளார்.
அதனால் இந்த பணிகள் உடனே தொடங்கப்படும். இதுவரை 1.5 கோடி மாடுகள் மற்றும் எருமைக்கு மருந்து போடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுக்க 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும். கால்நடைகளுக்கு அடிக்கடி ஏற்படும் வாய் மற்றும் கால் சார்ந்த நோய்களை தடுக்கும் வகையில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த பணிகள் தொடர்ந்து செய்யப்படும்.
இதன் மூலம் நாடு முழுக்க பால் உற்பத்தி அதிகரிக்கப்படும். ஆகவே பால் உற்பத்தித் துறையில் சுமார் 15,000 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளன. தொடர்ந்து இதற்கு நிதி அளிக்கப்படும்.
பால் - நெய் உற்பத்தி மற்றும் பால் சார்ந்த பொருள் உற்பத்தி இதன் மூலம் அதிகரிக்கும். இதை ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பால், வெண்ணெய் போன்ற பால் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய முன் வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இதை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications