கங்கையை சுத்தம் செய்ய ரூ.33000 கோடி செலவு! என்ன பயன்? குளிக்க தகுதியில்லை என பசுமை தீர்ப்பாயம் பளிச்
டெல்லி: கங்கை நதியை சுத்தம் செய்ய கடந்த 38 ஆண்டுகளில் ரூ.33,000 கோடி செலவு செய்யப்பட்டும் அதனால் எந்த பயனும், முன்னேற்றமும் இல்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கங்கை நதியில் குளிக்கக் கூட தகுதியில்லாத வகையில் நீர் மாசுப்பட்டிருப்பதாகவும், இந்தப் போக்கு நீடித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க நேரிடும் எனவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கங்கை நதியியில் நாளொன்றுக்கு 258.67 மில்லியன் லிட்டர் கழிவு நீரானது கலப்பதாக பசுமைத் தீர்ப்பாயம் மிகத் தெளிவாக அடிக்கோடிட்டு சுட்டிக்காட்டியிருக்கிறது.

கங்கை நதி பாயும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் மாசுபாட்டை தடுத்து கட்டுப்படுத்துவது உரிய விவகாரங்களை பசுமை தீர்ப்பாயம் கவனித்தில் கொண்டு விசாரித்து வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் கங்கை நதி மாசுபட்டிருப்பது குறித்து கடும் அதிருப்தியை பதிவு செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் கழிவுநீரை சுத்திகரிக்க உரிய வசதிகள் அமைக்கப்படவில்லை எனக் கூறியுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம்,
மேற்கு வங்கத்தின் 9 மாவட்டங்களில் கங்கை நதி பாயும் நிலையில் எந்த மாவட்டத்திலும் மாசுபாட்டை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ள பசுமை தீர்ப்பாயம், இந்த நிலையே தொடருமானால் சுற்றுச்சூழல் இழப்பீடு அபராதம் விதிப்பதை தவிர வேறு வழியே தெரியவில்லை என பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நோக்கில் கடந்த 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கங்கை செயல் திட்டத்தின் 2014ல் நமாமி கங்கை திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு கங்கை நதியை தூய்மைப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த மோடி, அதனை நிறைவேற்ற அறிவியல் பூர்வமான முறையில் நமாமி கங்கை செயல் திட்டத்தை கொண்டு வந்தார்.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் கடந்த 1986ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 20,000 கோடி ரூபாய் கங்கையை சுத்தப்படுத்த செலவு செய்யப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2022 வரை 13,000 கோடி ரூபாய் கங்கை நதி தூய்மைப்படுத்தும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் கங்கை நதியை சுத்தம் செய்ய ரூ.33,000 கோடி செலவு செய்யப்பட்டும் அதனால் எந்த பயனும், முன்னேற்றமும் இல்லை என்பது தான் பசுமை தீர்ப்பாயத்தின் கருத்தாக உள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications