கங்கையை சுத்தம் செய்ய ரூ.33000 கோடி செலவு! என்ன பயன்? குளிக்க தகுதியில்லை என பசுமை தீர்ப்பாயம் பளிச்
டெல்லி: கங்கை நதியை சுத்தம் செய்ய கடந்த 38 ஆண்டுகளில் ரூ.33,000 கோடி செலவு செய்யப்பட்டும் அதனால் எந்த பயனும், முன்னேற்றமும் இல்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கங்கை நதியில் குளிக்கக் கூட தகுதியில்லாத வகையில் நீர் மாசுப்பட்டிருப்பதாகவும், இந்தப் போக்கு நீடித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க நேரிடும் எனவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கங்கை நதியியில் நாளொன்றுக்கு 258.67 மில்லியன் லிட்டர் கழிவு நீரானது கலப்பதாக பசுமைத் தீர்ப்பாயம் மிகத் தெளிவாக அடிக்கோடிட்டு சுட்டிக்காட்டியிருக்கிறது.

கங்கை நதி பாயும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் மாசுபாட்டை தடுத்து கட்டுப்படுத்துவது உரிய விவகாரங்களை பசுமை தீர்ப்பாயம் கவனித்தில் கொண்டு விசாரித்து வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் கங்கை நதி மாசுபட்டிருப்பது குறித்து கடும் அதிருப்தியை பதிவு செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் கழிவுநீரை சுத்திகரிக்க உரிய வசதிகள் அமைக்கப்படவில்லை எனக் கூறியுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம்,
மேற்கு வங்கத்தின் 9 மாவட்டங்களில் கங்கை நதி பாயும் நிலையில் எந்த மாவட்டத்திலும் மாசுபாட்டை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ள பசுமை தீர்ப்பாயம், இந்த நிலையே தொடருமானால் சுற்றுச்சூழல் இழப்பீடு அபராதம் விதிப்பதை தவிர வேறு வழியே தெரியவில்லை என பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நோக்கில் கடந்த 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கங்கை செயல் திட்டத்தின் 2014ல் நமாமி கங்கை திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு கங்கை நதியை தூய்மைப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த மோடி, அதனை நிறைவேற்ற அறிவியல் பூர்வமான முறையில் நமாமி கங்கை செயல் திட்டத்தை கொண்டு வந்தார்.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் கடந்த 1986ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 20,000 கோடி ரூபாய் கங்கையை சுத்தப்படுத்த செலவு செய்யப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2022 வரை 13,000 கோடி ரூபாய் கங்கை நதி தூய்மைப்படுத்தும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் கங்கை நதியை சுத்தம் செய்ய ரூ.33,000 கோடி செலவு செய்யப்பட்டும் அதனால் எந்த பயனும், முன்னேற்றமும் இல்லை என்பது தான் பசுமை தீர்ப்பாயத்தின் கருத்தாக உள்ளது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications