Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவிற்கு எதிராக ஒரே அணி...நிதிஷ் குமாருக்கு’ஷாக்’ கொடுத்த நவீன் பட்நாயக்..இப்படி சொல்லிட்டாரே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் மக்களவை தேர்தலில் தனித்தே பிஜூ ஜனதா தளம் கட்சி போட்டியிடும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். நவீன் பட்நாயக்கின் இந்த அறிவிப்பு, தேசிய அளவில் பாஜகவிற்கு மாற்றாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ்குமாரின் முயற்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மக்களவை தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. சொல்லப்போனால் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு ஆண்டுதான் இருக்கிறது. வரும் மக்களவை தேர்தலில் மத்தியில் கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

Naveen Patnaik Says his party will go it alone in the coming election, setback for Nitish Kumar

எதிர்க்கட்சிகள் தனித்தனியாக செயல்பட்டால் மோடியை வீழ்த்துவது கடினம் என்று கருதும் எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வருகின்றன. இதற்கான முயற்சிகளில் மம்தா பானர்ஜி , தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக நிதிஷ் குமார் சமீப நாட்களாக எதிர்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் மேற்கு வங்காள முதல்வர், மம்தா பானர்ஜி , மகராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கையும் நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அரசியல் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசியிருக்கலாம் என கருதப்பட்டது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைக்கும் தனது திட்டம் குறித்தும் நவீன் பட்நாயக்கிடம் நிதிஷ் குமார் பேசியிருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைந்து செயல்படும் திட்டம் தனக்கு இல்லை என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். நவீன் பட்நாயக்கின் இந்த முடிவு, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ் குமாரின் முடிவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்த நவீன் பட்நாயக் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Naveen Patnaik Says his party will go it alone in the coming election, setback for Nitish Kumar

அப்போது, தேர்தலில் நீங்கள் தனித்துதான் போட்டியிட போகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த நவீன் பட்நாயக், எப்போதுமே இதுதான் திட்டம். புரி விமான நிலையத்தில் நான் பிரதமர் மோடியை சந்தித்தேன். சாத்தியமான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி கூறினார். டெல்லியில் நான் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திக்க போவது இல்லை" என்றார்.

முன்னதாக நிதிஷ்குமாரை சந்தித்த பிறகு நவீன் பட்நாயக் டெல்லி சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது வரும் மக்களவை தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம் என்று நவீன் பட்நாயக் கூறியிருக்கிறர்.

நவீன் பட்நாயக்கை பொறுத்தவரை பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே பல விவகாரங்களில் எடுத்து இருக்கிறார். குறிப்பாக முக்கிய மசோதாக்களுக்கு மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பதோடு, எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டங்களையும் கடந்த காலங்களில் புறக்கணித்தே வந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+