நீட்,ஜேஇஇ தேர்வுகளை நடத்தினால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்- மத்திய அரசுதான் பொறுப்பு: நாராயணசாமி
டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தினால் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து விடும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நீட்-ஜேஇஇ தேர்வு, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி பங்கினை மத்திய அரசு செலுத்தாது, புதிய கல்வி கொள்கை, சுற்றுச் சூழல் வரைவு அறிக்கை ஆகியவை தொடர்பாக பாஜக அல்லாத மாநிலங்களின் முதல்வர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.

இதில் மமதா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ஹேமந்த்சோரன், நாராயணசாமி, அசோக் கெலாட், பூபேஷ் பாகல், அமரீந்தர்சிங் உள்ளிட்டோர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்து கொண்டனர். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை இந்த கூட்டத்தில் சோனியா காந்தி கடுமையாக சாடினார்.
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்காத மத்திய அரசை கடுமையாக சாடினார் சோனியா காந்தி. இதில் பேசிய மமதா பானர்ஜி, மத்திய அரசு மாநில உரிமைகளை நசுக்குகிறது என விமர்சித்தார்.
மேலும் புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், நீட்-ஜேஇஇ தேர்வுகளை தற்போதைய சூழ்நிலையில் நடத்தினால் கொரோனா பாதிப்பு அதிகரித்து விடும். நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

இதேபோல் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பேசுகையில், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு 4 மாதங்களாக ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என்றார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில் தம்முடைய விசாரணை ஏஜென்சிகளை ஏவிவிடுகிறது மத்திய அரசு என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications