பேரவலம்.. உத்தரப் பிரதேசத்தில் கங்கையில் வீசப்படும் சடலங்களை.. பிடிக்க வலைகளை அமைத்த பீகார்
டெல்லி: கங்கை நதியில் வரும் சடலங்களைப் பிடிக்க உத்தரப் பிரதேச எல்லையில் வலையை அமைத்துள்ளதாகவும் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் பீகார் நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உத்தரப் பிரதேசம் - பீகார் எல்லையில் அமைந்துள்ள சவுசா நகரத்தில் நேற்று முன்தினம் கங்கை நதியில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு ஓய்வதற்கு முன்னரே நேற்று உத்தரப் பிரதேசத்திலும் கங்கை நதியில் சில சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க போதிய பணமில்லாததால் இதுபோல நதியில் உடல்கள் வீசப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
இந்த சடலங்கள் கொரோனா நோயாளிகளின் சடலங்களாக இருந்தால் எங்கு தங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் பீகார் மக்களிடம் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், சடலங்களைப் பிடிக்க உத்தரப் பிரதேச மாநில எல்லையில் கங்கை ஆற்றில் வலை வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆற்றின் எல்லையில் ரோந்துப் பணிகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகப் பீகார் மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்ற சம்பவங்கலால் மிகவும் வருத்தமற்றதாகவும் இதனால் கங்கை நதிக்கும் பேராபத்து என்றும் அவர் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட 25 உடல்களை உடற்கூராய்வு செய்ததில் அவர்கள் உயிரிழந்து நான்கு முதல் ஐந்து நாட்களை வரை ஆகியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாகவும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications