உங்களின் சின்ன முயற்சியும் பெரிதாக உதவும்.. மோடி டுவிட்டரில் வேண்டுகோள்
டெல்லி: தேவையற்ற பயணங்கள் யாருக்கும் உதவி செய்யாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள தகவலில், மறவாதீர்கள்.. இது பீதி கிடையாது, முன்னெச்சரிக்கைதான் என்று தலைப்பிட்டு அவர் கூறியுள்ளார்.
வீடுகளில் இருப்பது மட்டும் கிடையாது, அவரவர் எந்தெந்த ஊர்களில் இருக்கிறீர்களோ, அந்த ஊர்கள், அந்தந்த நகரங்களில் அப்படியே இருங்கள். அனாவசியமான, தேவையற்ற பயணங்கள் யாருக்கும் உதவாது. இந்த மாதிரி நேரங்களில் சின்னச்சின்ன முயற்சிகளும் மிகப்பெரிய தாக்கத்தை இந்த சமூகத்தில் ஏற்படுத்தும்.
Never forget - precautions not panic!
— Narendra Modi (@narendramodi) March 21, 2020
It’s not only important to be home but also remain in the town/ city where you are. Unnecessary travels will not help you or others.
In these times, every small effort on our part will leave a big impact. #IndiaFightsCorona
மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை ஏற்று நடக்க வேண்டிய தருணம் இது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கவேண்டுமென்று யாருக்கெல்லாம் அறிவுரை கூறப்படுகிறதோ, அவர்கள் அனைவரும் அதை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது உங்களுடைய பாதுகாப்புக்கு மட்டும் கிடையாது, உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் பாதுகாப்புக்கும் சேர்த்து தான் சொல்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
This is the time we should all listen to the advise given by doctors and authorities.
— Narendra Modi (@narendramodi) March 21, 2020
All those who have been told to stay in home quarantine, I urge you to please follow the instructions.
This will protect you as well as your friends and family. #IndiaFightsCorona