ஹாங்காங்கில் நிரவ் மோடியின் ரூ.250 கோடி சொத்துகள் முடக்கம். . அமலாக்கத்துறை அதிரடி . .
புதுடெல்லி: பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடிக்கு சொந்தமான ரத்தினங்கள், நகைகள் என ஹாங்காக்கில் உள்ள மொத்தம் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு, குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடி, 2018-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
இதையடுத்து நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன.

லண்டனில் நிரவ் மோடி
மேலும், அவரது நிறுவனத்தின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லண்டன் போலீசாரால் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தும் பணியிலும் அமலாக்கப்பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இறுதி கட்டத்தில் வழக்கு
ஆனால் இந்த வழக்கை எதிர்த்து அவர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது நிரவ் மோடி தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், ''நிரவ் மோடியை அடைக்க தயார் படுத்தப்பட்டுள்ள மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் கொரோனா பரவல் குறித்த அச்சம் உள்ளது என்றும், அங்குள்ள சிறையில் நிரவ் மோடி அடைக்கப்பட்டால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படலாம் என்றும் அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்புள்ளது'' எனக் கூறினார். நிரவ் மோடி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட வாதத்தை ஏற்றுக் கொண்ட லண்டன் நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையும் தற்போது இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

ரூ.250 கோடி சொத்துகள் முடக்கம்
இந்த நிலையில், ஹாங்காக்கில் நிரவ் மோடிக்கு சொந்தமான சொத்துக்கள், நகைகள், வங்கி இருப்புகள் ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன் மதிப்பு ரூ.253.62 கோடியாகும். நிரவ் மோடிக்கு சொந்தமான இந்தியாவிலும் வெளிநாட்டிலும் என ரூ.2 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை இதுவரை முடக்கியுள்ளது. நிரவ் மோடியின் சில சொத்துக்கள், தனியார் பெட்டகங்களில் கிடக்கும் ரத்தினங்கள் மற்றும் நகைகள் மற்றும் வங்கி இருப்புக்கள் ஆகியவை கண்டறியப்பட்டு சட்ட விரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பிரிவுகளின் கிழ் முடக்கப்பட்டுள்ளதாக அமலாகக்த்துறை தெரிவித்துள்ளது.

வங்கிகளிடம் ஒப்படைப்பு
இதுபோக, நிரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என ரூ.1389 கோடி மதிப்புடைய சொத்துகளை தப்பியோடிய தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
இந்தியாவில் அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? நாட்டின் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க











Click it and Unblock the Notifications