மிக விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் நீரவ் மோடி.. பிரிட்டன் உள் துறை அமைச்சகம் ஒப்புதல்
டெல்லி: குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி. நாட்டின் மிகப் பிரபலமான வைர வியாபாரிகளில் ஒருவராக இருந்த இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
இது குறித்து விசாரணை செய்ய முதலில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து அவர் உடனடியாக அவர் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றார். நீரவ் மோடி மீதான வழக்கை சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவு
நீரவ் மோடி லண்டனுக்குத் தப்பிச் சென்றது உறுதியானதைத் தொடர்ந்து, அவரை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டிருந்தது. லண்டன் நீதிமன்றத்தில் இது தொடர்பாக இந்தியா தொடர்ந்திருந்த வழக்கில் நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதி அளித்த லண்டன் நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தீர்ப்பளித்திருந்தது. மேலும், இது தொடர்பான கோப்புகளைப் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் அனுப்பியிருந்தது.

பிரிட்டன் அரசு அனுமதி
இந்நிலையில், இந்தியா அரசுக்கு மற்றுமொரு வெற்றியாக, நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதன் மூலம் மிக விரைவில் நீரவ் மோடி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதியாகியுள்ளது. இருப்பினும், நாடு கடத்துவதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நீரவ் மோடிக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான வியாபாரம் இல்லை
முன்னதாக கடந்த பிப்ரவரி லண்டன் நீதிபதி நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதி அனுமதி அளித்திருந்தார். அதில் அவர், ரூ.14 ஆயிரம் கோடி வங்கி மோசடியில் நீரவ் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. நீரவ் மோடி முறையான வியாபாரத்தில் ஈடுபட்டார் என்பதை ஏற்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.

விசாரணைக்கு முகாந்திரம் உள்ளது
மேலும், அவரது பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் இருப்பதாகவும் இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக நீரவ் மோடி மீது இந்தியா விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளது என்று கூறி, அவரை நாடு கடத்த உத்தரவிட்டார். இருப்பினும், நீரவ் மோடி தான் நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கப் பிரிட்டன் நாட்டில் தொடர்ந்து அகதியாக வாழ விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications