எனக்கு என்னாச்சு.. நான் எங்கிருக்கிறேன்.. எல்லாத்தையும் வெளியிடுவேன்.. டேட் குறித்த நித்யானந்தா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மருத்துவ அறிக்கையை எப்போது வெளியிடுவார் என்பது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நித்யானந்தாவின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், பரமசிவனின் ஆசிர்வாதம்! சமாதி குறித்து சமாதியில் இருந்து மற்றொரு லைவ் கவரேஜ் தருகிறேன். பரமசிவனின் அறிவு மற்றும் சக்திகளின் உயர்ந்த வெளிப்பாடுகளுக்கு உடல் சீரமைக்கிறது.

அதிர்ஷ்டவசமாக எனது முழு உடலும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறது. பல நோயறிதல் முறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமாதி நிலையில் இருப்பது என்பது நோயல்ல என்பதை ஆவணங்களுடன் நிரூபித்துவிட்டாயிற்று.

இதயம் மூளை

இதயம் மூளை

எனது இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றன. நான் முழுக்க முழுக்க ஐசியூ செட்டப்பில்தான் இருக்கிறேன். சமாதி என்பது கோமா நிலை அல்ல. என் உடல் சரியானதும் வழக்கம்போல் சத்சங்கங்கள் கொடுக்கும் போது நான் இந்த உலகிற்கு மருத்துவ அறிக்கைகளை வெளியிடுவேன்.

அசதியே இல்லை

அசதியே இல்லை

உணவோ திரவங்களோ அருந்தாவிட்டாலும் எனக்கு அசதி என்பதே இல்லை. எனக்கு பொழுதுபோக்கு இல்லை. தருமபுரம் ஸ்ரீ சுவாமிநாதனின் தேவாரத்தை கேட்பேன். போரடிக்கவில்லை. சமாதி என்பது மனம் சார்ந்த நிலை அல்ல, உணர்வுபூர்வமான நிலை. உடல், மனம், உணர்ச்சிகளுக்கு அப்பால் உள்ளது. எனக்கு தனிப்படட ஆர்வமும் நோக்கங்களும் இல்லை.

தனிப்பட்ட யோசனை

தனிப்பட்ட யோசனை

என்னை பற்றிய தனிப்பட்ட யோசனை அல்லது கருத்து அல்லது அறிவாற்றல் கூட என்னிடம் இல்லை. சமாதி என்பது ஒரு தீவிர ஆன்மீக நச்சு நீக்கம் ஆகும். இப்போது வரை பல ஆய்வுகளை மருத்துவ ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் செய்து ஆவணங்களை வெளியிட்டுள்ளோம். நான் அடுத்த சில நாட்களில் சத்சங்கம் செய்ய திரும்பி வருவேன்.

Recommended Video

    India வர திட்டம் போடும் Nithyananda.. மோசமாகும் உடல்நிலை? #Tamilnadu | Oneindia Tamil
    மருத்துவ அறிக்கை

    மருத்துவ அறிக்கை

    சமாதி நிலையின் போது மட்டும் எனது உடலை மற்றவர்கள் தொடாமல் இருக்க வேண்டும். அனைத்து மருத்துவர்களும் எனது சீடர்களும் அந்த நிலையை புரிந்து கொண்டு என் உடலை தொடாமல் உள்ளார்கள் என்றார். மருத்துவ அறிக்கையை எப்போது வெளியிடுவார் என்பதை நித்யானந்தா அறிவித்துள்ளது நெட்டிசன்களை குழப்பமடைய செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உடலுக்கு என்ன ஆச்சு என்பது குறித்தும் உடல் உறுப்புகளின் நிலை என்ன என்பது குறித்தும் நித்யானந்தா வெளியிட்டிருந்தார். அதில் எல்லா உறுப்புகளும் நன்றாக இருக்கிறது எனும் போது புதிய மருத்துவ அறிக்கையில் என்ன இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+