வங்கிகள் இணைப்பு- ஒரு ஊழியரை கூட பணிநீக்கம் செய்ய மாட்டோம்: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
Recommended Video
சென்னை: வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் எந்த ஒரு ஊழியரையும் பணி நீக்கம் செய்யமாட்டோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்ட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கிகளின் ஒரு பகுதியாக வங்கிகள் இணைக்கப்படும் என வெள்ளிக்கிழமையன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதற்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வங்கி ஊழியர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையின் போது ஒரு ஊழியரைக் கூட பணிநீக்கம் செய்ய மாட்டோம் என ஊழியர் சங்கங்களிடம் தெளிவாகவே கூறிவிட்டோம். இந்த விவகாரத்தில் அரசு உறுதியாக உள்ளது என திட்டவட்டமாக கூறினார்.
மேலும் ஆள்குறைப்பு மற்றும் பணியாளர்கள் நீக்கம் தொடர்பாக வெளியாகும் தகவல்களும், உருவாக்கப்படும் அச்ச உணர்வும் தவறானது எனறும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications