கொரோனா வேக்சின் ஏற்றுமதிக்கு "நோ" தடை.. தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படும்.. இந்தியா அதிரடி முடிவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா வேக்சின் ஏற்றுமதி தடை செய்யப்படவில்லை, தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன், ஆஸ்திரேலியா தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாதான் கொரோனா வேக்சின் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் சீரம் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கோவிட்ஷீல்ட் நிறுவனத்தின் வேக்சின் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

No India did not ban vaccine import to any country so far

இந்த நிலையில் கடந்த செவ்வாயில் இருந்து இந்த வேக்சின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதால் வேக்சின் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுவிட்டது என்று செய்திகள் வெளியானது. இது சில உலக நாடுகளுக்கு இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இந்தியாவில் கொரோனா வேக்சின் ஏற்றுமதி தடை செய்யப்படவில்லை. இதுவரை அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கு தேவைப்படும் வேக்சினை பொறுத்து ஏற்றுமதி முறைப்படுத்தப்படும். நேரத்திற்கு தகுந்தபடி வேக்சின் ஏற்றுமதி முறைப்படுத்தப்படும். இந்தியாவின் தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

அதே சமயம் நட்பு நாடுகளுக்கு தொடர்ந்து வேக்சின் ஏற்றுமதி செய்யப்படும். இதுவரை வேக்சின் ஏற்றுமதியில் எந்த தடையையும் இந்தியா விதிக்கவில்லை. இதுவரை 75க்கும் அதிகமான நாட்களுக்கு 60 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களை ஏற்றுமதி செய்து உள்ளோம்.

ஏற்றுமதி இதே வேகத்தில் தொடர்ந்து நடக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+