Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படித்தான் போனவாட்டி தேர்தல் நேரத்தில் டிவியில் திடீரென மோடி வந்து என்ன சொன்னார் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று மாலை 5.30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக அறிவிப்பு வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், அக்னி ஏவுகணை சோதனை பற்றிய அறிவிப்பை மோடி இன்று வெளியிட்டார். இதேபோல தான் கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவும் இதே போன்ற ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விண்வெளி திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் மோடி. அது பற்றி இங்கே பார்க்கலாம்.

2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளன. தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தேர்தல் கூட்டணி மற்றும் பேச்சுவார்த்தையில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பிற மாநிலக்கட்சிகள் மும்முரமாக உள்ளன.

Not only this time Prime Minister Modi announced the space program before the 2019 elections

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 8 ஆம் தேதி வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கடந்த மார்ச் 9 ஆம் தேதி அதாவது அறிவித்த மறுநாளே 100 ரூபாய் சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது.

மக்களை கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக அறிவிப்பு வெளியானது. 5.30 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் உரை என்றதும் மக்கள் மத்தியில் ஒரு வித பதற்றம் கலந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பணமதிப்பிழப்பு பற்றிய அறிவிப்பா.. அல்லது பெட்ரோல் டீசல் விலை குறைப்பா?

குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய அறிவிப்பா என பெரும் எதிர்பார்ர்ப்பு ஏற்பட்டது. ஆனால், பிரதமர் மோடி.. 5.30 மணிக்கு தனது எக்ஸ் தளத்தில் அக்னி திட்டம் குறித்த அறிவிப்பை பதிவிட்டு பரபரப்புக்கு முற்று புள்ளி வைத்தார். கடந்த 2019 ஆம் ஆண்டும் தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி இதேபோன்ற ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதாவது அப்போது தேர்தலுக்கு முன்பாக மார்ச் 27 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அப்போதும் இதேபோன்று விண்வெளி தொடர்பான ஒரு அறிவிப்பையே பிரதமர் மோடி வெளியிட்டார். மோடி கூறுகையில், "விண்வெளியில் வலம் வரும் செயற்கை கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் செயற்கை கோளை அழிக்கும் வல்லமை படைத்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றதாகவும் மோடி அப்போது அறிவித்தார். அதாவது, அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா மட்டுமே இந்த திறனை பெற்று இருப்பதாகவும் கூறினார். விண்வெளியில் போட்டி அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மிஷன் சக்தி சோதனை நடத்தப்பட்டதாகவும் வேறு எந்த நாட்டிற்கு எதிராகவும் இந்த திறன் பயன்படுத்தப்படாது எனவும் நாட்டு மக்களுக்கு மோடி ஆற்றிய உரையில் கூறியிருந்தார்.

புவியின் சுற்று வட்டப்பாதையில் 300 கிமீட்டர் தொலைவில் செயல்பாட்டில் இருந்த செயற்கை கோளை சுட்டு வீழ்த்துவதற்கான ஏவுகணையை இந்தியா விஞ்ஞானிகள் வெற்றிரமாக செய்ததாகவும் இது அரிய சாதனை எனவும் பெருமை பட கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+